
சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பலத்த மழை பொழிந்ததால் குளுமை நிலவியது.
“வங்கிகள் பிடித்தம் செய்ய வேண்டாம்”- நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவுறுத்தல்!
தலைநகர் சென்னையில் பகலில் வெயில் சுட்டெரித்த நிலையில், பிற்பகலில் வானில் கருமேகங்கள் திரண்டது. அதன் பின்னர், கிண்டி, வடபழனி, கோயம்பேடு, அசோக் நகர், வேளச்சேரி, நங்கநல்லூர் உள்ளிட்ட இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை பொழிந்தது.
தாம்பரம், குரோம்பேட்டை, ஆவடி, திருநின்றவூர், பள்ளிக்கரணை, மேடவாக்கம் உள்ளிட்ட சென்னை புறநகர் பகுதிகளிலும் விட்டு விட்டு கனமழை பொழிந்தது. இரவிலும் பலத்தை காற்றுடன் கனமழை பெய்தது.
சேலத்தில் பெரியார் சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மரியாதை!
அதேபோல், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களிலும் பரவலாகக் கனமழை பெய்தது. கனமழையால், தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர்.