spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரிசையில் நின்று வாக்களித்தார்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரிசையில் நின்று வாக்களித்தார்!

-

- Advertisement -

 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரிசையில் நின்று வாக்களித்தார்!

we-r-hiring

தி.மு.க.வின் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், மக்களோடு மக்களாக நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தார்.

அரசியல் கட்சிப் பிரமுகர்கள், வேட்பாளர்கள் வாக்களித்தனர்!

தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளிலும் இன்று (ஏப்ரல் 19) காலை 07.00 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் அதிகாலை முதலே வாக்குச்சாவடி மையத்திற்கு வந்து காத்திருந்து, வாக்களித்து வருகின்றனர். அதேபோல், அரசியல் கட்சிகளின், வேட்பாளர்கள், தமிழக அமைச்சர்கள் வாக்களித்து வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள எஸ்ஐஇடி கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் வந்திருந்த தி.மு.க.வின் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், மக்களோடு மக்களாக நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தார்.

சேலத்தில் வாக்களித்தார் எடப்பாடி பழனிசாமி!

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “மக்கள் அனைவரும் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்ற வேண்டும்; வாக்குரிமைப் பெற்றிருக்கும் அனைவரும் மறந்திடாமல் வாக்கு செலுத்த வேண்டும்” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

MUST READ