Homeசெய்திகள்தமிழ்நாடுபெரம்பலூரில் லஞ்ச வழக்கில் கைதான துணை வட்டாட்சியர் தப்பியோட்டம்!

பெரம்பலூரில் லஞ்ச வழக்கில் கைதான துணை வட்டாட்சியர் தப்பியோட்டம்!

-

- Advertisement -

பெரம்பலூரில் லஞ்ச வழக்கில் கைதான துணை வட்டாட்சியர் மருத்துவமனையில் இருந்து தப்பியோடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூரில் திருமண மண்டபத்திற்கு தடையில்லா சான்றிதழ் தர ரூ.20 ஆயிரம் லஞ்சம் பெற்ற வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டனர்.இந்த வழக்கில் துணை வட்டாட்சியர் பழனியப்பன், விஏஓ நல்லுசாமி ஆகியோரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கடந்த சில நாட்களுக்குய் முன்பு கைது செய்துள்ளனர். இதில் துணை வட்டாட்சியர் பழனியப்பனை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தபோது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் பழனியப்பன் நேற்றிரவு திடீரென மருத்துவமனையிலிருந்து தப்பியோடியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

MUST READ