
கொடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமியைத் தொடர்புப்படுத்திப் பேச கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடுரோட்டில் போதை ஆசாமி அட்டகாசம்
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் அரங்கேறிய கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அது தொடர்பான வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியைத் தொடர்புப்படுத்திப் பேச, இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மறைந்த ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தன்னைப் பற்றி பேச தனபாலுக்கு தடை விதித்து, 1 கோடியே 10 லட்சம் ரூபாய் மனநஷ்ட ஈடு பெற்றுத் தரக்கோரி, எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
பழம்பெரும் நடிகை வஹிதா ரஹ்மானுக்கு தாதா சாகேப் பால்கே விருது!
இதனிடையே, சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு ஆஜரான கனகராஜின் சகோதரர் தனபால், எடப்பாடி பழனிசாமி, இளங்கோவன், தங்கமணி, வேலுமணி ஆகியோர் கனகராஜிடம் நேரடியாக மூளைச்சலவைச் செய்து கொடநாடு சம்பவத்தில் ஈடுபடுத்தியதாக வாக்குமூலம் அளித்தார்.