தி.மு.க.வைச் சேர்ந்தவரும், கோவை மேற்கு மாவட்ட முன்னாள் செயலாளருமான பையா கவுண்டர் என்ற ஆர்.கிருஷ்ணன் தற்கொலை செய்துக் கொண்டார்.
நாளை மறுதினம் தொடங்குகிறது டெஸ்ட் போட்டி – இந்திய அணி தீவிர வலைப்பயிற்சி
கோவை மாவட்டத்தைச் சேர்ந்த தி.மு.க. நிர்வாகிகளில் முக்கியமானவரும், கோவை மேற்கு மாவட்ட முன்னாள் செயலாளருமான பையா கவுண்டர், தனது வீட்டிலேயே தற்கொலை செய்துக் கொண்டார். அவரை மீட்ட குடும்பத்தினர், ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் சென்ற நிலையில், பையா கவுண்டர் உயிரிழந்தார்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கோவில்பாளையம் காவல்துறையினர், பையா கவுண்டரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன், வழக்குப்பதிவுச் செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், குடும்ப பிரச்சனை காரணமாக அவர் தற்கொலைச் செய்துக் கொண்டது தெரிய வந்தது.
முதல் டெஸ்ட் போட்டி – இங்கிலாந்து அணி தடுமாற்றம்
தி.மு.க.வின் முன்னாள் மாவட்டச் செயலாளரின் மறைவுக்கு அக்கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துள்ளார்.