spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுவிபத்தில் பலியான 5 பெண்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி!

விபத்தில் பலியான 5 பெண்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி!

-

- Advertisement -

செங்கல்பட்டு மாவட்டம் பழைய மாமல்லபுரம் சாலையில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்த 5 பெண்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தனியாா் வாகனம் மோதி பெண் தொழிலாளி பலி

we-r-hiring

இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் வட்டம், பழைய மாமால்லபுரம் சாலை பையனூர் மதுரா பண்டிதமேடு சந்திப்பில் இன்று பிற்பகல் 2.20 மணியளவில்  பையனூர் பாளையத்தம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ஆந்தாயி, லோகம்மாள், யசோத, விஜயா மற்றும் கௌரி ஆகிய 5 பெண்கள் சாலையோரத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தபோது திருப்போரூரிலிருந்து மாமல்லபுரம் நோக்கி சென்று கொண்டிருந்த கார் ஒன்று எதிர்பாராத விதமாக மோதிய விபத்தில் மேற்குறிப்பிட்ட 5 பெண்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியை அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

மேலும், இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா
ரூ.2 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன், இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

MUST READ