spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு'கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்'- எடப்பாடி பழனிசாமி எழுப்பிய கேள்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்!

‘கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்’- எடப்பாடி பழனிசாமி எழுப்பிய கேள்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்!

-

- Advertisement -

 

'கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்'- எடப்பாடி பழனிசாமி எழுப்பிய கேள்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்!

we-r-hiring

தமிழ்நாடு சட்டப்பேரவையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி எழுப்பிய கேள்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்தார்.

செந்தில் பாலாஜி ராஜினாமா- ஆளுநர் ஒப்புதல்!

தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரில் பேசிய சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “அவசர அவசரமாக ஏன் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தைத் திறக்கப்படும்? கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் சிறு பிரச்சனைகள் இருந்ததை அமைச்சரே ஒப்புக்கொண்டுள்ளார். பேருந்து நிலையத்தில் எந்த வசதியும் செய்யப்படவில்லை என மக்கள் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்” என்றார்.

இதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “கிளாம்பாக்கத்தில் இருந்த பிரச்சனைகளை சரி செய்த பிறகு தான் பேருந்து நிலையம் திறக்கப்பட்டது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் வேறு பிரச்சனை இருந்தால் கொண்டு வாருங்கள்; தீர்வு காண்போம்” எனத் தெரிவித்தார்.

“கோவையில் இனி ஒருநாள் விட்டு ஒருநாள் குடிநீர் வழங்கப்படும்”- அமைச்சர் கே.என்.நேரு அறிவிப்பு!

இதனிடையே, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு பதில் கேளம்பாக்கம் என செல்லூர் ராஜு குறிப்பிட்டதால் சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் சிரித்ததால் சிறிது நேரம் பேரவையில் சிரிப்பலை காணப்பட்டது.

MUST READ