மேற்கு வங்காளத்தின் முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி விபத்தில் சிக்கியது தொடர்பாக கமல்ஹாசன் ஆறுதல் தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மேற்கு வங்காளத்தின் முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு கார் விபத்தில் தலையில் சிறு காயம் ஏற்பட்டுள்ளது. நேற்றைய தினத்தில் அவர் பத்ராமணிலிருந்து கொல்கத்தா திரும்பும் வழியில் காரில் பயணித்துள்ளார். அப்போது முன்னாள் சென்ற வாகனம் திடீரென பிரேக் பிடித்ததில் இவருடைய காரும் திடீரென பிரேக் போடப்பட்டது. அப்போது காரின் முன் இருக்கையில் அமர்ந்திருந்த மம்தா பானர்ஜியின் தலை காரில் மோதி சிறு காயம் ஏற்பட்டுள்ளது. காலநிலை சவால்களால் அவர் ஹெலிகாப்டரில் பயணிக்காமல் காரில் பயணித்துள்ளார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த மம்தா, தன்னுடைய டிரைவர் பிரேக் போடவில்லையெனில் தான் இந்த விபத்தில் உயிர் பிழைத்திருப்பது கடினம் என்றும் கூறியுள்ளார். இந்நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்ய கட்சித் தலைவருமான கமல்ஹாசன், மம்தா பானர்ஜிக்கு ஆறுதல் தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அவருடைய பதிவில் ” நீங்கள் விபத்தில் காயம் அடைந்ததை கேள்விப்பட்டேன் மம்தா ஜி. நீங்கள் விரைவில் குணமடைய வேண்டும். மக்களாட்சி நாட்டில் மக்களுக்காக போராட உங்களை போன்ற சாம்பியன்கள் தேவை” என்று பதிவிட்டுள்ளார்.
- Advertisement -