
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 25- க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஜப்பான் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி
இது குறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “நீலகிரி, கோவை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், சேலம், நாமக்கல், தென்காசி, சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கரூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்காலிலும் இன்று (நவ.09) காலை 10.00 மணி வரை அதாவது 3 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


