spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு”மீண்டும் அமைச்சர் செந்தில் பாலாஜி" நாளை அறிவிப்பு?

”மீண்டும் அமைச்சர் செந்தில் பாலாஜி” நாளை அறிவிப்பு?

-

- Advertisement -

”அமைச்சர் செந்தில் பாலாஜி" நாளை அறிவிப்பு?”அமைச்சர் செந்தில் பாலாஜி” நாளை அறிவிப்பு? – சீனியர் ஜெர்னலிஸ்ட் லக்ஷ்மணன்  

தமிழக அமைச்சரவை நாளை மாலை 3.30க்கு மாற்றி அமைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து சீனியர் ஜெர்னலிஸ்ட் லக்ஷ்மணன் தனது X பதிவில் கூறியிருப்பதிவது.

பல மாதங்களாக எதிர்பார்க்கப்பட்ட தமிழக அமைச்சரவை மாற்றம் நாளை பிற்பகல் 3.30 க்கு அரங்கேற இருப்பதாக கூறப்படுகிறது. மூன்று அமைச்சர்கள் நீக்கப்பட்டு புதிதாக மூன்று பேர் அமைச்சராக நியமிக்ப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செந்தில் பாலாஜி மீண்டும் மின்சாரம் மற்றும் மதுவிலக்குத் துறை அமைச்சராவதில் ஆச்சரியமில்லை. ஆனால் கடந்த ஐம்பதாண்டுகால வரலாற்றில் முதல் முறையாக உயர்கல்விக்கு பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவர் அமைச்சராக பொறுப்பேற்க இருக்கிறார். நிஜமாகவே சமூக நீதியை வலுப்படுத்தும் ஏற்பாடு இது. இந்தப் புரட்சிக்கு கடந்த பத்தாண்டுகளில் வித்திட்டவர், மறைந்த ஜெயலலிதாதான். பட்டியலினத்தைச் சேர்ந்தவரை பள்ளிக்கல்வி அமைச்சராக்கியவர் அவர்.

we-r-hiring

https://x.com/splakshmanan76?lang=en

சிறுபான்மை சமூகத்தவர் கவலைப்பட ஒன்றுமில்லை. ஒருவர் போய் ஒருவர் வருகிறார். பால் வளம் கைமாறுகிறது. சுற்றுச்சூழல் இன்னொருவருக்கு கூடுதலாகப் போகிறது என கூறியுள்ளார்.

லட்டு தயாரிப்புக்கும் ஆந்திர அரசுக்கும் தொடர்பு இல்லை – ஜெகன் மோகன் ரெட்டி

மற்றொரு பதிவில், ”நாளை நடைபெற உள்ள அமைச்சரவை மாற்றத்தின்போதே உதயநிதியை துணை முதலமைச்சராக நியமிப்பதற்கான அறிவிப்பும் வர இருக்கிறது. உதயநிதிக்கு கூடுதலாக எந்தெந்த இலாக்காக்கள் ஒதுக்கப்படும்…?இதற்காக துறைகளை இழக்கப்போகும் சீனியர்கள் யார் யார்..? என்றெல்லாம் கடந்த சில வாரங்களாக வதந்திகள், கேள்விகள் உலா வந்தன. சீனியர்கள் நிம்மதிப் பெருமூச்சு விடலாம். “அப்படி யாருடைய துறையையும் பறித்து எனக்கு கூடுதலாக எந்தத் துறையும் வேண்டாம். இப்போதிருக்கும் விளையாட்டுத் துறையே போதும்” என்று சொல்லிவிட்டார் உதயநிதி. வாரிசு என்பதால் ஆணவத்தையோ, அதிகார மமதையையோ காட்டாமல் தன்னடக்கத்தோடு உழைத்தால் தமிழக மக்கள் ரசிக்கவே செய்வார்கள். அந்தத் தடத்திலேயே பயணிக்க விரும்பும் உதயநிதிக்கு வாழ்த்துகள். ஆனாலும், முதல்வர் தன் வசம் இப்போது வைத்துள்ள திட்டம் மற்றும் வளர்ச்சித் துறையை உதயநிதிக்கு கூடுதலாகத் தர இருக்கிறார்கள். கற்றுக்கொள்ள நல்ல துறை. இதே தன்னடக்கத்தோடு, கூடுதல் உழைப்போடு புதிய பதவியைத் தொடர மீண்டும் வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார்.

MUST READ