தொடர் மழையால், நெல்லை சந்திப்பு பேருந்து நிலையம் முழுமையாக குளம் போல் மாறியுள்ளது. மழை வெள்ளத்தால், நெல்லை பேருந்து நிலையத்தில் உள்ள பேருந்துகள் முழுமையாக மூழ்கியுள்ளன.
“வரலாறு காணாத மழைப் பொழிவால் பாதிப்பு”- தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா பேட்டி!
அதேபோல், தேனி மஞ்சளார் அணையில் இருந்து தண்ணீர் திறப்பால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மஞ்சளார் ஆற்றில் நீர்த்திறப்பு உயர்வால் தேனி, திண்டுக்கல் மாவட்ட ஆற்றங்கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 57 அடி கொள்ளளவு கொண்ட மஞ்சளார் அணை 56.50 அடியை எட்டியதால் 552 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
மேகமலை மற்றும் வெள்ளி மலைப்பகுதியில் பெய்த கனமழையால் மேகமலை அருவியில் வெள்ளப் பேருக்கு ஏற்பட்டுள்ளது. அருவியில் இருந்து சோதனைச் சாவடி வரை தண்ணீர் ஓடுவதால் சுற்றுலாப் பயணிகள் அருவிக்கு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இரவில் இருந்து பெய்யும் மழையால் தேனி வைகை அணைக்கு நீர்வரத்து 18,586 கனஅடியாக அதிகரித்துள்ளது. வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பால் தேனி, மதுரை உள்ளிட்ட 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
“தென் மாவட்டங்களில் அரசு இயந்திரம் குவிப்பு”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
மொத்தம் 71 அடி கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் தற்போது 67 அடியாக எட்டியதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கோவில்பட்டியில் இருந்து ராஜபாளையம் செல்லும் சாலை துண்டிப்பால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.