சென்னை தியாகராயர் நகரில் நடைபெறவுள்ள பிரதமர் நரேந்திர மோடியின் ரோடு ஷோவுக்கு 20 நிபந்தனைகளுடன் சென்னை காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது.
விளவங்கோட்டில் செல்வப்பெருந்தகை தேர்தல் பிரச்சாரம்!
பிரதமரின் ரோடு ஷோவுக்கு நிபந்தனைகள் என்னென்ன? என்பது குறித்து விரிவாகப் பார்ப்போம்!
பிரதமரின் ரோடு ஷோவின் போது தொண்டர்கள் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது. வெறுப்புணர்வை தூண்டும் வகையில் முழக்கங்களை எழுப்பத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் ரோடு ஷோவின் போது உரையாற்றவும் அனுமதியில்லை. மத நம்பிக்கைகளைக் காயப்படுத்தும் வகையிலும், வெறுப்புணர்வுத் தூண்டும் வகையிலும் முழக்கங்களை எழுப்பத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க எதிர்ப்பு!
நிபந்தனைகள் மீறப்பட்டால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பிரதமரின் ரோடு ஷோவில் பேனர், கட் அவுட்டுகள் உள்ளிட்டவற்றை வைக்கக் கூடாது. ரோடு ஷோவில் பங்கேற்பவர்கள் எந்த பதாகையையும் ஏந்திச் செல்லக் கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது.