spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுமழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தாமதமின்றி மேற்கொள்ள வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தாமதமின்றி மேற்கொள்ள வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

-

- Advertisement -

தமிழகம் முழு​வதும் மழைக்​கால முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கைகளை தாமதமின்றி மேற்​கொள்ள வேண்​டும், கடந்த காலங்களைப் போல் இந்த ஆண்​டும் தொடரக்​கூ​டாது என தமிழக அரசுக்கு தமாகா தலை​வர் ஜி.கே.​வாசன் வலி​யுறுத்​தி​யுள்​ளார்.மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தாமதமின்றி மேற்கொள்ள வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

இதுதொடர்​பாக அவர் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழகத்​தில் கடந்த 4 ஆண்​டு​களாக மழைக்​காலத்​தின் போது, சென்​னை​யில் பல இடங்​களில் மழைநீர் வடி​யாமல் தேக்​கமடைந்​த​தால் சுகா​தா​ரத்​தி​லும், போக்​கு​வரத்​தி​லும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

we-r-hiring

சென்னை மட்​டுமல்ல திருநெல்​வேலி, கன்​னி​யாகுமரி, மதுரை, கடலூர் என பல மாவட்​டங்​களில் மழைக்​காலத்​தில் பொது​மக்​கள் பெரிதும் பாதிக்​கப்​பட்​டனர். இதற்​கெல்​லாம் காரணம், தமிழக அரசு மழைக்​கால முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கைகளை உரிய காலத்​தில் முறை​யாக மேற்​கொள்​ளாதது தான் என குற்றம்சாட்டியுள்ளாா்.

இந்த ஆண்​டும் அதே நிலை தொடரக்​கூ​டாது. எனவே, இந்த ஆண்​டிலா​வது மழைக்​கால பாதிப்​பில் இருந்து மக்​களை பாது​காக்க தமிழக அரசு முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கைகளை தாமதமின்றி தொடங்க வேண்​டும். மழைக்​காலம் தொடங்​கி​விட்​ட​தால் பொது ​மக்​களை பாது​காக்​கும் வகை​யில் உடனடியாக திட்​டங்​களை வகுத்து செயல்​படுத்த வேண்​டும்.

அந்​தவகை​யில், தமிழகம் முழு​வதும் சாலை வசதி, மின்சார இணைப்பு, அரசுப் பேருந்துகளில் மேற்கூரை, மரங்கள் பராமரிப்பு, கல்வி நிறுவனங்கள், அரசு கட்டிடங்கள் மற்றும் நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் என அனைத்திலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மேலும், வடி​கால் பணி​கள், சுகா​தா​ரப் பணி​கள் தயார் நிலை​யில் இருக்க வேண்​டும். தமிழகம் முழு​வதும் மழைக்​காலத்​தில் ஏற்​படும் புயல் மற்றும் வெள்​ளத்​தால் தங்​களைப் பாதுகாத்துக்கொள்வதற்கான விழிப்​புணர்வை மக்​களிடையே ஏற்​படுத்த வேண்​டும்.

ஏற்கனவே தொடங்கப்பட்டு இன்னும் நிறைவடையாத பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தாமதமின்றி மேற்கொள்ள வேண்டும் என்பது தமாகா தலைவர் ஜி.கே.வாசனின் வலியுறுத்தியுள்ளாா்.

பாஜகவின் 18 சதவீத ஓட்டு! தமிழ்நாட்டிலும் வாக்கு திருட்டு! கிழித்தெடுத்த பொன்ராஜ்!

MUST READ