spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஆயுத பூஜை-தீபாவளி பண்டிகைகால சிறப்பு ரயில்கள்- தெற்கு ரயில்வே அறிவிப்பு

ஆயுத பூஜை-தீபாவளி பண்டிகைகால சிறப்பு ரயில்கள்- தெற்கு ரயில்வே அறிவிப்பு

-

- Advertisement -

ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நாளை முதல் தொடங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.ஆயுத பூஜை-தீபாவளி பண்டிகைக்கான சிறப்பு ரயில்கள்- தெற்கு ரயில்வே அறிவிப்புதசரா,ஆயுத பூஜை மற்றும் தீபாவளியையோட்டி சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்​டிகைக்​காக சென்​னை​யில் இருந்து புறப்​படும் விரைவு ரயில்​களில் டிக்​கெட் முன்​ப​திவு ஏற்​கெனவே முடிந்​து​விட்​டது. முக்​கிய ரயில்​களில் காத்​திருப்​போர் எண்​ணிக்கை 1,000 வரை பதி​வாகி​யுள்​ளது. எந்​தெந்த ரயில்​களுக்கு தேவை அதி​க​மாக உள்​ளது என்று ஆய்வு செய்​து, அதற்​கேற்ப சிறப்பு ரயில்​கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அந்த அறிவிப்பின் படி. செப்டம்பர் 23 முதல் அக்டோபர் 23 வரை சென்னை எழும்பூர் – தூத்துக்குடி இடையே இரு மார்க்கத்திலும் வாராந்திர ரயில் இயக்கப்பட உள்ளது. அதேபோல், செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 26 வரை தாம்பரத்தில் இருந்து நாகர்கோயில் இடையேயும், செப்டம்பர் 25 முதல் அக்டோபர் 23 வரை சென்னையில் இருந்து கோவை போத்தனூர் இடையே சிறப்பு ரயில். இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நாளை காலை 8.00 மணி முதல் தொடங்கும் எனவும், பயணிகள் தங்களுக்குத் தேவையான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

‘ஜெயிலர் 2’ படத்தில் நடிக்க விரும்புகிறேன்…. சிவகார்த்திகேயன் பட நடிகை!

we-r-hiring

MUST READ