ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதியில் மக்களின் 30 ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்ற பல்வேறு அரசு திட்டப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்ட சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மாவட்ட ஆட்சியர்.கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகண்டை கூட்டச் சாலையில் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீருடன் கூடிய பயணிகள் நிழற்குடையை ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் ஆகியோர் திறந்து வைத்தனர். மேலும், அப்பகுதி மக்களின் 30 ஆண்டுகால கோரிக்கையான கடுவனூர் கூட்டு குடிநீர் திட்டத்தை கூவனூர் கிராம தென்பெண்ணை ஆற்றில் இருந்து கடுவனூர் வரை உள்ள 19 கிராமங்கள் பயன்பெறும் வகையில் இந்த புதிய கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்ச்சியிலும் சட்டமன்ற உறுப்பினரும், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரும் கலந்து கொண்டனர்.
மண்ணை கவ்வும் மதுரை பிளான்! அமித்ஷா விட்ட டோஸ்! அண்ணாமலை பிளான் க்ளோஸ்!