தை பிறந்தாச்சு- ஜல்லிக்கட்டு எப்பொழுது??? தமிழர்கள் ஆவலுடன் !!!
தை பிறக்கப்போகிறது, மக்கள் இப்போதே பொங்கலுக்கு தயாராகிவிட்டனர். பொங்கல் என்றால் கரும்பும், ஜல்லிக்கட்டும் இல்லாமலா இருக்கும்..அது தமிழரின் அடையாளங்களில் பிரிக்க முடியாத அம்சங்கள். ஜல்லிக்கட்டு தமிழர்களின் பாரம்பரிய கலைகளில் ஒன்று. தை பிறந்தாலே தமிழர்கள் ஆவலுடன் தங்களது கலைவிழாவிற்காக காத்திருப்பது வழக்கம்.
இந்த நிலையில் இந்தாண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டிகள் எங்கு நடக்கும் என்ற கேள்வி எழுந்தது. புத்தாண்டை ஒட்டி புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சி கிராமத்தில் விண்ணேற்பு அன்னை ஆலயவிழா வரும் ஜனவரி 6 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த விழாவை ஒட்டி ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த விழா குழுவினர் சார்பில் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்ற மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதி அளித்துள்ளார்.ஜல்லிக்கட்டு காளைகளை இப்போதே தயார் செய்யும் பணிகளில் காளை வளர்ப்போர் ஈடுபட்டு வருகின்றனர்.