எடப்பாடி அருகே 4 – குழந்தையை விற்பனை செய்த தந்தை உட்பட ஐந்து இடைத்தரகர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்த இச்சம்பவம் எடப்பாடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்துள்ள சித்தூர் திம்மபதியான்வளவு, பகுதியைச் சேர்ந்த சேட்டு,குண்டுமல்லி, என்ற தம்பதியினர் வசித்து கொண்டு சேட்டு கரும்பு வெட்டும் கூலித்தொழில் செய்து வருகின்றனர்.

தொடர்ந்து இவர்களுக்கு ஏழு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடிந்து இருவருக்கும் ஐந்து குழந்தைகள் இருந்துள்ளது. அதில் இரண்டு குழந்தைகள் ஏற்கனவே இறந்த நிலையில் குடும்ப வறுமையால் தவித்த சேட்டு இரண்டு பெண் குழந்தைகளை புரோக்கர் மூலம் விற்பனை செய்ததாகவும் மீண்டும் ஒரு ஆண் குழந்தையும் விற்பனை செய்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் குண்டுமல்லி மீண்டும் கர்ப்பம் அடைந்து அவருக்கு கடந்த 15 நாட்களுக்கு முன்பு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தையையும் விற்பனை செய்வதற்காக குழந்தைகள் விற்பனை செய்து கொடுக்கும் புரோக்கர்களான எடப்பாடி பகுதியைச் சேர்ந்த செந்தில் முருகன் மற்றும் ஆலச்சம்பாளையம் பகுதியைச் சேர்ந்த முனுசாமி ஆகியோரை தொடர்பு கொண்டு உள்ளார்.
அப்போது நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியைச் சேர்ந்த தேவராஜ் என்பவருக்கு ஆண் குழந்தை தேவைப்படுவதாக தெரியவந்துள்ளது. இதை அடுத்து அவரை சந்தித்து பேசியவுடன் குழந்தைக்கு ஒரு லட்சம் ரூபாய் தருவதாகவும் ஆனால் குழந்தையை முறைப்படி தத்து கொடுக்க வேண்டும் என வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
ஆனால் அந்த நடைமுறைக்கு சேட்டு ஒத்து வராததால் சேலம் மாவட்டம் குழந்தைகள் நல அலுவலர் ஸ்ரீ முரளிக்கு தேவராஜ் தகவல் தெரிவித்தனர்.
மேலும் பிரசவத்திற்கு பின்பு குண்டுமல்லி, கிராம செவிலியர்களின் கண்காணிப்பில் இருந்து வந்தனர். அப்போது மருந்து மாத்திரை வழங்குவதற்காக வீட்டிற்கு சென்ற செவிலியர்கள் குழந்தையை விற்பனை செய்ய உள்ளது தெரியவந்தது.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தன் பேரில் அதிகாரிகள் சேட்டுவை பிடித்து விசாரித்தனர் அப்போது சட்டவிரோதமாக ஏற்கனவே மூன்று குழந்தைகளை புரோக்கர்கள் மூலம் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.
தொடர்ந்து சேட்டுவை கைது செய்து விசாரணை நடத்தியதில் குழந்தைகள் விற்பனை செய்யும் புரோக்கர்களான செந்தில்முருகன், முனுசாமி உட்பட 2 பேரையும் கைது செய்த நிலையில் போலீசார் சேட்டுவை வீட்டிற்கு அழைத்துச் செல்லும்போது போலீசாரிடமிருந்து தப்பி ஓடிய சேட்டு வை நீண்ட நேரம் போராட்டத்திற்கு பின்னர் மீண்டும் கைது செய்தனர்.
அதோடு மற்ற குழந்தைகளை விற்பனை செய்த இடைத்தரர்களான பாலாமணி, தமிழ்ச்செல்வன், லோகாம்பாள் என மொத்தம் 6 பேரை போலீசார் கைது செய்து வேறு எங்கெல்லாம் குழந்தைகள் விற்பனை செய்து உள்ளார்கள் என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பிய பின்னர் 6 பேரையும் சிறையில் அடைத்த இச்சம்பவம் எடப்பாடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.