spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்பிரேசிலில் மனைவி, 7 மகள்கள், மாமியாரை 20 ஆண்டுகளாக பலாத்காரம் செய்து வீட்டு சிறையில் வைத்ததாக...

பிரேசிலில் மனைவி, 7 மகள்கள், மாமியாரை 20 ஆண்டுகளாக பலாத்காரம் செய்து வீட்டு சிறையில் வைத்ததாக ஒருவர் கைது

-

- Advertisement -

பிரேசிலில் மனைவி, 7 மகள்கள், மாமியாரை 20 ஆண்டுகளாக பலாத்காரம் செய்து வீட்டு சிறையில் வைத்ததாக ஒருவர் கைது
பிரேசிலில் தனது மனைவி, மகள்கள் 7 பேர் & மாமியாரை பலாத்காரம் செய்ததாக 54 வயது நபர் கைதாகியுள்ளார். 20 ஆண்டுகளாக அவர் அப்பெண்களை ஹவுஸ் அரஸ்ட் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். பிரேசிலின் நோவோ ஓரியண்டேயில் உள்ள அவரது வீட்டுல் இருந்து மகள் ஒருவர் தப்பித்து போலீசாரிடம்  சென்று தந்தையின் துன்புறுத்தல்களை கூறியுள்ளார்.

அந்த நபர் தனது மனைவியை திருமணம் செய்ததில் இருந்து ஹவுஸ் அரஸ்ட் செய்ததாக கூறப்படுகிறது. மனைவியை அத்தியாவசிய தேவைக்கு மட்டும் தன்னுடன் வெளியே அழைத்து செல்வார் எனவும் அண்டை வீட்டுக்காரர்கள் மற்றும் உறவினர்களுக்கும் கூட அவரது மனைவியைத் தெரியாது எனவும் தெரிவிக்கின்றனர்.

we-r-hiring

3-22 வயதுள்ள மகள்களை அந்நபர் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும், அவர் வீட்டு குளியலறையில் துளையிட்டு அவர்கள் குளிப்பதை பார்த்து வந்ததாக அவரது மகள்கள் தெரிவித்துள்ளனர். கருக்கலைப்பு செய்வதற்கு முன்பும் கூட அந்த நபர் அவர்களை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் கூறப்படுகிறது

மேலும் அவரது மாமியாரையும் பாலியல் ரீதியாக  துன்புறுத்தி வந்துள்ளார் எனவும் மாமியாருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்படாததால் அவர் உயிரிழந்ததாக போலீசார் கூறுகியுள்ளனர்.

இந்நிலையில் மகள்களில் ஒருவர் அந்நபருக்கு தூக்க மாத்திரை கொடுத்து தப்பித்து சென்று போலீசில் புகார் கொடுத்துள்ளார். மகள் அளித்த புகரின் அடிப்படையல் போலீஸார் அவரை கைது செய்துள்ளனர். இதைத்தொடர்ந்து கைதான அந்த நபர் தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளார். ஆனால் அந்த நபர் அவர் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளதாகவும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

MUST READ