Homeசெய்திகள்சென்னைஎடப்பாடி குற்றச்சாட்டுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி…

எடப்பாடி குற்றச்சாட்டுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி…

-

- Advertisement -

எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுக்கு அமைச்சர் சேகர்பாபு மறுப்பு தெரிவித்ததோடு, ராமேஸ்வரம் கோயிலில் உள்ளூர் மக்களுக்கு தொடர்ந்து சிறப்பு அனுமதி வழங்கப்பட்டு வருவதாக விளக்கம் அளித்துள்ளாா். நயினார் பயத்தில் இருப்பதால் அனைவரையும் கூட்டணிக்கு வா வா என்று அழைத்துக்கொண்டு இருக்கிறார். திமுக கூட்டணி வலுவாக உள்ளது என்று கூறினாா்.எடப்பாடி குற்றச்சாட்டுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி…சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் உள்ள அருள்மிகு ஏகாம்பரநாதர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டுமான பணிகளை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து, ”ஏகாம்பரநாதன் கோயிலுக்கு சொந்தமான இந்த பள்ளியை தனியார் அறக்கட்டளை நூறு ஆண்டுகளாக நடத்தி வந்த நிலையில் பொருளாதார பிரச்சனையால் திருக்கோயிலிடம் ஒப்படைத்துவிட்டார்கள். பள்ளிக்குத் தேவையான 32 கூடுதல் வகுப்பறைகள் 11 கோடி செலவில் கட்ட திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த மாத இறுதிக்குள் பணிகள் முடிந்து பயன்பாட்டுக்கு ஒப்படைக்கப்படும். தனியார் பள்ளிகளுக்கு நிகராக இந்த பள்ளி அமையும்.

பள்ளி எங்கள் கட்டுப்பாட்டுக்குள் வருவதற்கு முன்பு சுமார் 700 மாணவர்கள் படித்து வந்தார்கள். தற்பொழுது 1170 மாணவர்கள் படித்து வருகிறார்கள். கூடுதல் வகுப்பறைகள் கட்டி வரும் நிலையில் அடுத்த ஆண்டு மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். கோயில் சொத்துக்களை மீட்கும் வேட்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  சுமார் 7 ஆயிரத்து 800 கோடியை நெருங்கி இருக்கிறது.

பழனியில் நடந்த முருகன் மாநாடு தாக்கத்தால் தற்பொழுது ஓடி ஓடி மதுரையில் மாநாடு நடத்துகிறார்கள். மதம் சார்ந்து மக்களை பிரிப்பது எங்கள் பணி அல்ல. மதத்தால் மொழியால் மக்களை பிளவுபடுத்துபவர்களை மக்கள் அடையாளம் கண்டு கொண்டிருக்கிறார்கள். இந்த சக்திகள் 2026 இல் புறக்கணிக்கப்படுவார்கள். விரட்டியடிக்கப்படுவார்கள்.எடப்பாடி குற்றச்சாட்டுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி…ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் உள்ளூர் மக்கள் சிறப்பு தரிசனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டு 200 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டு தொடர்பான கேள்விக்கு, புரிதல் இல்லாமல் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அவர் ராமேஸ்வரத்திற்கு செல்ல வேண்டும். அவர் ராமேஸ்வரத்திற்கு சென்று பார்த்து அங்கு இருக்கும் நிலையை அறிந்த பிறகு அறிக்கை கொடுக்க வேண்டும். அப்பொழுது பதில் சொல்ல தயாராக இருக்கிறேன். காற்று வாக்கில் வருவதை உள்வாங்கிக் கொண்டு அறிக்கையாக வெளியிடுகிறார். அப்படி எதுவும் நடக்கவில்லை. உள்ளூர் மக்களுக்கு சிறப்பு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. எல்லா கோயில்களிலும் உள்ளூர் மக்களுக்கு சிறப்பு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

தமிழ் கடவுள் முருகன் தமிழக முதலமைச்சரை விரும்புகிறார். ஏனென்றால் இதுவரை 117 முருகன் திருக்கோயில்களில் திருப்பணிகள் நடைபெற்றுள்ளது. திமுக ஆட்சியில் தமிழ் கடவுள் முருகனுக்கு பெருமை சேர்த்தது போன்று எந்த ஆட்சியிலாவது பெருமை சேர்த்ததுண்டா?  2026 ஆம் ஆண்டு முருகன் கையில் இருக்கும் வேல் வெற்றியைக் கொடுக்கும் கூடுதல் தொகுதிகளை கேட்போம் என்று சண்முகம் கூறியது தொடர்பான கேள்விக்கு? அது அவரின் கருத்து. தலைமை சார்ந்த விஷயம். தலைமை முடிவெடுக்கும். திமுக கூட்டணியில் இருக்கும் கட்சியோடு பேசி வருவதாக நயினார் நாகேந்திரன் பேசியது குறித்த கேள்விக்கு, நயினாரின் பயம் தெரிகிறது. அனைவரையும் வா வா என்று அழைத்துக் கொண்டிருக்கிறார். புலிக்கு பயந்தவர்கள் எல்லாம் என் மேல் ஏறிப்படுத்துக் கொள்ளுங்கள் என்ற பழமொழி நயினாருக்கு பொருந்தும்

கூட்டணியில் இருக்கும் தோழமைக் கட்சிகள் திமுக கூட்டணி உறுதியாக இருப்பதாக அறிவித்துக் கொண்டிருக்கிறார்கள். கூட்டணியை தேடி திமுக தலைமையில் அமைந்துள்ள இந்த கட்டுமானம் எங்கும் செல்லவில்லை. தங்கள் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் தான் கூட்டணி கூட்டணி என்று பறந்து கொண்டிருக்கிறார்கள். திமுக தலைமையிலான கூட்டணி வலுவாக இருக்கிறது. கூட்டணி கட்சிகள் இதுபோன்று கேட்பது திமுகவுக்கு நெருக்கடியாக இருக்கிறதா என்ற கேள்விக்கு. ஃப்ரீயாக இருக்கிறோம் எங்களை பார்த்து நெருக்கடியாக இருப்பதாக கேட்கிறீர்களே. அவர்கள்தான் நெருக்கடியில் இருக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமிக்கு மேடையே கிடைப்பதில்லை.. அதனால் யாரைப் பார்த்தாலும் நாடகமா என்று கேட்கிறார்.

வாழப்பாடி அருகே பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோவில், இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் கோவிலில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை, 5:30 மணிக்கு, திருமணம் செய்து கொள்ள, மணமக்கள் வந்திருந்தனர். அவர்களுக்கு, 3,000 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டது. இருப்பினும் கோவில் நிர்வாகம் மணமக்கள் வரிசையில் சென்று திருமணம் செய்து கொள்ளும்படி வரைமுறைப் படுத்தப்படவில்லை. இதனால் திருமணம் செய்ய இடம் பிடிப்பதில், மணமக்களின் உறவினர்கள் இடையே தகராறு ஏற்பட்டது. ஒருவருக்கொருவர் தள்ளியபடி தாக்கிக் கொண்டதால், சிறிது நேரம் பதற்றம் உருவானது.  இதுகுறித்து இணை ஆணையர் தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டும், இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பல கோயில்களில் திருமண நிகழ்ச்சிக்காக கூடுதல் திருமண மண்டபங்கள் கட்டப்பட்டு வருகிறது. வாழப்பாடி கோயிலும் உரிய முறையில் வரைமுறைப்படுத்தப்படும் என்று கூறினாா்.

3000 அடி உயரத்திலிருந்து விழுந்து நொறுங்கிய விமானம்…

MUST READ