அறிவியல் சார்ந்த நில வரைபடத்தின் அடிப்படையில், புதிய தீயணைப்பு நிலையங்கள் ஏற்படுத்தும் தமிழக தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.அறிவியல் சார்ந்த நில வரைபடத்தின் அடிப்படையில், புதிய தீயணைப்பு நிலையங்கள் ஏற்படுத்தப்படும் என, 2021 – 22 பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டது. இதன் அடிப்படையில், 1985-ம் ஆண்டு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் சட்டத்துக்கு பதிலாக, புதிய மசோதா கடந்த மே மாதம் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் இந்த சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். இந்த புதிய சட்டத்தின் படி தமிழகத்தில் உள்ள கட்டடங்கள் ‘ஏ,பி,சி,’ என மூன்று வகையாக பிரிக்கப்படும்.
‘ஏ’ வகை கட்டடங்களுக்கு தீயணைப்பு உரிமம், ‘பி’ வகை கட்டடங்களுக்கு தீ பாதுகாப்பு சான்றிதழ், ‘சி’ வகை கட்டடங்களுக்கு சுய சான்றளிக்கப்பட்ட தீ பாதுகாப்பு நெறிமுறை சான்றிதழ் வழங்கப்படும். நேரடி நிகழ்ச்சிகள், கண்காட்சி, கேளிக்கைகள், விழாக்களில், தீ பற்றக் கூடிய அல்லது அபாயகரமான பொருட்களை பயன்படுத்தினால், தற்காலிக தீயணைப்பு உரிமம் பெறுவது கட்டாயம். தேசிய கட்டட விதிகளில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப, கட்டடங்களில் தீத்தடுப்பு மற்றும் உயிர் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு வகை செய்ய வேண்டும்.
அபாயகரமான தொழிற்சாலை, தொழிற்கூடம், வணிக அல்லது பொது கட்டடங்களில், தீத்தடுப்பு மற்றும் உயிர் பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதி செய்ய, தீயணைப்பு பாதுகாவலரை நியமிக்க வேண்டும். அபாயகரமான கட்டடங்கள், வளாகங்களில் குடியிருப்பவர்கள், உரிமையாளர்களை வெளியேற்றி, அந்த கட்டடங்களை சீல் வைக்க, தீயணைப்பு துறையினருக்கு அதிகாரம் அளிக்கப்படுகிறது.
போயிங் 787 ‘ட்ரீம்லைனர்’ விமானங்கள் குறித்த உண்மையை உடைத்த அமெரிக்க பொறியாளர்…