
அரசியல் பரபரப்புகளுக்கிடையில் மத்திய அமைச்சர்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜுலை 03) சந்தித்துப் பேசவுள்ளார்.

கோயம்பேடு சந்தை..தக்காளி விலை ஒரு கிலோவுக்கு ரூ.10 குறைவு
மக்களவைத் தேர்தல் நெருங்க உள்ள நிலையில், அரசியல் நகர்வுகள் வேகம் பிடிக்கத் தொடங்கியுள்ளன. எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ள நிலையில், பா.ஜ.க.வும் தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில், மத்திய அமைச்சர்களை பிரதமர் இன்று (ஜூலை 03) சந்தித்துப் பேசவுள்ளார்.
நலத்திட்டங்களின் செயல்பாடுகள் உள்ளிட்டவைகள் குறித்து மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் விவாதிப்பார் என தெரிகிறது. இதற்கிடையே, மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆளும் கூட்டணியில் இணைந்துள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஒரு பிரிவைச் சேர்ந்த பிரஃபுல் படேல், மகாராஷ்டிரா மாநில துணை முதலமைச்சராக உள்ள தேவேந்திர பட்நாவிஸ் உள்ளிட்டோர் மத்திய அமைச்சரவையில் சேர்க்கப்படலாம் எனத் தெரிகிறது.
இது தவிர, கூட்டணி கட்சிகள் சிலவும் அமைச்சரவையில் தங்கள் பிரதிநிதியைச் சேர்க்கப் பரிந்துரைக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
“அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்க வேண்டும்”- எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!
மக்களவைத் தேர்தல் மட்டுமல்லாமல் விரைவில் வரவிருக்கும் ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், தெலுங்கானா, மிசோரம் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல்களைக் கருத்தில் கொண்டும் அமைச்சரவை விரிவாக்கம் இருக்கும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
அமைச்சரவை மாற்றம் தவிர, பா.ஜ.க.வில் அமைப்பு ரீதியான மாற்றங்களும் அடுத்து வரும் வாரங்களில் இருக்கும் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். கடந்த சில நாட்களாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா, பா.ஜ.க. அமைப்புச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் ஆகியோர் தனிப்பட்ட ஆலோசனை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.