Homeசெய்திகள்தமிழ்நாடுகுற்றால அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்ட தடை நீக்கம்

குற்றால அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்ட தடை நீக்கம்

-

- Advertisement -

குற்றால அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்ட தடை நீக்கம்

ஆர்ப்பரித்துக் கொட்டும் அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டதால் குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் விடுமுறை நாள் என்பதால் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குற்றாலத்தில் குவிந்துள்ளனர்.

Public bath allowed in Courtalam main waterfall | குற்றாலம் மெயின் அருவியில்  பொதுமக்கள் குளிக்க அனுமதி

தென்காசி மாவட்டத்தில் பெய்து வரும் மழை காரணமாக குற்றால அருவிகளுக்கு தண்ணீர் வரத்துஅதிகரித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த மழையால் குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து வெகுவாக அதிகரித்தது இதை எடுத்து பாதுகாப்பு கருதி நேற்று மாலை மெயின் அருவி மற்றும் ஐந்தறிவு நிலை குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது இன்று காலை தடை விலக்கி கொள்ள ப்பட்டது. இதைத் தொடர்ந்து சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தற்போது தொடர் விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் குற்றாலத்தில் குவிந்துள்ளனர். தமிழகம் முழுவதும் சுற்றுலா தலங்களுக்கு மக்கள் படையெடுக்க துவங்கியுள்ளனர். அவர்களை மகிழ்விக்கும் விதமாக அறிவியலில் தண்ணீர் தண்ணீர் இன்று ஆர்ப்பரித்து கொட்டுகிறது. மேலும் குற்றாலம் சுற்று வட்டாரத்தில் தற்போது வெயிலின்றி குளிர்ந்த சூழ்நிலையே காணப்படுகிறது. குளுமையான தட்பவெப்ப நிலை, மெல்லிய சாரல் மழை, ஆர்ப்பரிக்கும் அறிவித் தண்ணீர் ஆகியவை தங்களது விடுமுறையை மட்டற்ற ⁰ மகிழ்ச்சியாக்கி உள்ளது என சுற்றுலாப் பயணிகள் உற்சாகமடைந்துள்ளனர்.

MUST READ