
வார விடுமுறையையொட்டி, சபரிமலையில் ஐயப்ப பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. சபரிமலையில் பக்தர்களின் கூட்டத்தைக் கட்டுப்படுத்த திருப்பதி மாடல் வரிசைத் திட்டம் அமல்படுத்தப்பட்டு படிப்படியாகத் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

மீண்டும் தீவிர சிகிச்சையில் விஜயகாந்த்…. தீயாய் பரவும் தகவல் உண்மையா?
பக்தர்கள் வருகைக்கு ஏற்ப, பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை திருவிதாங்கூர் தேவசம் போர்டு மற்றும் கேரள அரசுத் துறைகள் செய்து வருகின்றனர். சபரிமலையில் இந்தாண்டு மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக, கடந்த நவம்பர் 16- ஆம் தேதி முதல் கோயில் நடைத் திறக்கப்பட்டதில் இருந்து ஐயப்ப பக்தர்களின் வருகைத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
‘தளபதி 68’ பக்கா…. ஓப்பனிங் சாங் வேற லெவல்…. அப்டேட் கொடுத்த படத்தின் பிரபலம்!
தினசரி 50,000 முதல் 80,000 வரை பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். பாதுகாப்புப் பணியில் கேரள மாநில காவல்துறையினரும், வனப்பகுதிகளில் வனத்துறை அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளனர்.