spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுநவீனமயமாகிறது அம்பத்தூர் ரயில் நிலையம் - பிரதமர் மோடி அடிக்கல்!

நவீனமயமாகிறது அம்பத்தூர் ரயில் நிலையம் – பிரதமர் மோடி அடிக்கல்!

-

- Advertisement -

அம்பத்தூர் ரயில் நிலையம் அம்ரித் பாரத் ரயில்நிலைய திட்டத்தின் கீழ் நவீன மயமாக்கபடுகிறது. இத்திட்டத்தை காணொளி காட்சி மூலம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

we-r-hiring

அம்ரித் பாரத் ரயில் நிலைய திட்டம் மூலம் 22 கோடி ரூபாய் மதிப்பில் அம்பத்தூர் ரயில் நிலையம் நவீன நடைமேடை, கழிப்பிடம், பயணிகள் வாகன நிறுத்துமிடம், கண்காணிப்பு கேமரா வசதி உள்ளிட்ட பல்வேறு நவீன தொழில் நுட்ப வசதிகளுடன் மேம்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தை பாரத பிரதமர் காணொளி துவக்கி தொடங்கி வைத்தார். இந்தியாவில் உள்ள ரயில் நிலையங்களில் அத்தியாவசிய தேவைகள் மற்றும் வசதிகளை ஏற்படுத்த அதனை நவீனப்படுதும் வகையில் அம்ரித் பாரத் ரயில் நிலைய திட்டம் மூலம் 554 ரயில் நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு மேம்படுத்தப்படவுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் அம்பத்தூர் ரயில் நிலையமும் நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்படவுள்ளது. இந்த திட்டத்திற்கு பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, திமுக மாநிலங்களவை உறுப்பினர் கிரி ராஜன் மற்றும் அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் சாமுவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

MUST READ