குட்கா விற்பனையாளர்களுடன் தொடர்பில் இருந்ததாக ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட 2 உதவி ஆய்வாளர்கள் மற்றும் 24 காவலர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் – ஆவடி காவல் ஆணையாளர் சங்கர் அதிரடி.
ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட ஆவடி,அம்பத்தூர், பூந்தமல்லி, உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இன்று குட்கா விற்பனை தொடர்பான சோதனை நடைபெற்றது.
இதில் 113 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது,23 கடைகள் சீல் வைக்கப்பட்டு 1 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக குட்கா விற்பனை செய்பவர்களுடன் தொடர்பில் இருந்ததாக 2 உதவி ஆய்வாளர்கள்,24 காவலர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி ஆவடி காவல் ஆணையாளர் சங்கர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.
குட்கா விற்பனை செய்பவர்கள்,அதற்கு துணை புரியும் காவலர்கள் மீது நடவடிக்கை தொடரும் எனவும் எச்சரிக்கை