அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்தவர்களும் திருநாகேஸ்வரர் கோவில் உபயதாரர்களாக இருக்கலாம் என்று நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று மக்கள் நீதி இயக்கம் சார்பில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.குன்றத்தூரில் காமாட்சி அம்மன் உடனுறை திருநாகேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. நவகிரக ஸ்தலங்களில் ராகு ஸ்தலமாக விளங்கக் கூடிய இந்த கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த வாரம் இந்த கோவிலில் பிரம்மோற்சவ விழா தொடங்கி முடிவடைந்தது. மேலும் இந்த கோவிலில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் மட்டுமே உபயதாரர்களாகவும், அறங்காவலர்களாக உள்ளதாகவும் மற்ற சமுதாயத்தைச் சார்ந்த மக்களிடமிருந்து உபயம் பெற்று பிரம்மோற்சவ விழா நடத்த வேண்டும் என அம்பேத்கர் மக்கள் நீதி இயக்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது.
இந்த வழக்கு விசாரணையில் மற்ற சமுதாயத்தைச் சேர்ந்த மக்களிடமும் இருந்து உபயம் பெற்று நடத்த வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்ததையடுத்து, அம்பேத்கர் மக்கள் நீதி இயக்கத்தைச் சார்ந்த நிர்வாகிகள் கோவில் முன்பு நின்று அங்கு சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்களுக்கு இனிப்புகள் வழங்கி தங்களது வெற்றிகளை கொண்டாடினார்கள்.
இதையடுத்து அவர்கள் அளித்த பேட்டியில், குன்றத்தூர் காமாட்சி அம்மன் உடனுறை திருநாகேஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழாவில் பிற சமுதாய மக்களை உபயதாரர்களாக சேர்க்காமல் இருந்து வருகிறது. மற்ற சமுதாயத்தை சார்ந்த மக்களிடமிருந்து உபயம் பெற்று திருவிழாவை நடத்த வேண்டும் என வழக்கு தொடர்ந்து உள்ளோம். இந்து சமய அறநிலையத்துறையின் கண்காணிப்பில் இந்த கோவில் செயல்பட்டு வருகிறது. இந்தக் கோவிலில் அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டனர். குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் அறங்காவலர்களாக உள்ளனர். அனைத்து சாதியினரும் உபயதாரர்களாக செய்யலாம் எனவும் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது என தெரிவித்தனர்.