spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாஎல்.ஐ.சி பணத்தை எடுத்து அதானியை காப்பாற்றிய மோடி – அம்பளப்படுத்திய ”தி வாஷிங்டன் போஸ்ட்”

எல்.ஐ.சி பணத்தை எடுத்து அதானியை காப்பாற்றிய மோடி – அம்பளப்படுத்திய ”தி வாஷிங்டன் போஸ்ட்”

-

- Advertisement -

இந்திய ஜனநாயகத்தின் முகத்தில் ஒட்டியிருக்கும் இந்த முகமூடியை கிழித்து,“நண்பர் பாதுகாப்பு அரசியல்”என்ற புதிய பாவனையை உலகம் முழுக்க வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது வாஷிங்டன் போஸ்ட் நாளிதழ்.எல்.ஐ.சி பணத்தை எடுத்து அதானியை காப்பாற்றிய மோடி – அம்பளப்படுத்திய ”தி வாஷிங்டன் போஸ்ட்”அமெரிக்காவின் புகழ்பெற்ற வாஷிங்டன் போஸ்ட் நாளிதழ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது,  ”இந்திய அரசியலில் “நெருங்கிய நண்பர்கள்” என்ற சொல்லுக்கு புதிய வரையறை அளித்திருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்ட அதிர்ச்சிகரமான தகவலின்படி, மோடி அரசு தனது நெருங்கிய தொழிலதிபர் ஆதரவாளர் கவுதம் அதானிக்கு ரூ.32,370 கோடி (அமெரிக்க டாலர் 3.9 பில்லியன்) மதிப்புள்ள “Bail Out Package” வழங்கியுள்ளது. இதுவே ஒரு சாதாரண நிதி உதவி அல்ல — இது இந்திய வரலாற்றில் மிகப் பெரிய க்ரோனி கேபிடலிசம் (Crony Capitalism) என சொல்லக்கூடியது.

அமெரிக்காவில் அதானி குழுமத்தின் மீது லஞ்சம் மற்றும் மோசடி குற்றச்சாட்டுகள் நிலவிக்கொண்டிருக்க, இந்திய அரசே அவருக்கு நிதி ஊட்டுகிறது என்பது, நிர்வாக நெறிமுறைகளின் முழுமையான சரிவைக் காட்டுகிறது. அரசு நடத்தும் எல்.ஐ.சி மற்றும் பிற பொதுத் துறைகள் “மக்கள் நம்பிக்கையை கூட்டும்” பெயரில் அதானி நிறுவனங்களில் மேலும் முதலீடு செய்ய “அறிவுறுத்தப்பட்டுள்ளன” என்று செய்தி கூறுகிறது.

we-r-hiring

இதனால் வெளிப்படையான கேள்வி எழுகிறது: பொது நிறுவனங்களின் பணம் எப்போது முதலமைச்சர் நண்பர்களின் தனிப்பட்ட பாதுகாப்புக் கருவியாக மாறியது? வாஷிங்டன் போஸ்ட் தெளிவாகச் சொல்கிறது. இது பொருளாதாரக் கொள்கை அல்ல, அரசியல் பாதுகாப்பு. மோடியின் ஆட்சியில் தனியார் லாபமும், அரசுக் கொள்கையும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்களாகி விட்டன. பொதுமக்களின் வரிப்பணமும், பொது நிறுவனங்களின் நம்பிக்கையும், எல்லாம் ஒரே திசையில் “அதானி மீட்பு” நோக்கி செல்கின்றன.

இந்த வெளிப்பாடு மூன்று கடுமையான கேள்விகளை எழுப்புகிறது:
1. வெளிப்படைத்தன்மை எங்கே?
2. பொது நிறுவனங்கள் எவ்வாறு எந்த அளவில், யாரின் உத்தரவின் பேரில் முதலீடு செய்தன?
3. பொது நிதி மீது அரசியல் ஆதிக்கம் ஏன்?
4.மக்களின் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்ட நிதி நிறுவனங்கள் அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தபடுவதா?
5. ஊழலை எதிர்க்க வந்த ஆட்சி, அதையே சட்டபூர்வமாக்கும் நிலைக்கு எப்படி வந்தது?
மோடி அரசு “சுயநிறைவு இந்தியா” என்று பேசுகிறது; ஆனால் அதே அரசு “நிறைவு” பெறுவது, ஒரு தொழிலதிபரின் பொருளாதார வாழ்வாதாரத்தை காப்பாற்றும் விலைவாசியில். இது ஒரு பொருளாதார செய்தி மட்டுமல்ல இது ஒரு நெறிமுறைச் சரிவு. பொதுமக்களின் நம்பிக்கையை விற்றுவிட்டு, ஒரு கூட்டாளியின் லாபத்திற்காக அரசின் ஆட்சி கருவிகளைப் பயன்படுத்தியதற்கான சாட்சியாக வாஷிங்டன் போஸ்ட் செய்தி நிற்கிறது. இந்திய ஜனநாயகத்தின் முகத்தில் ஒட்டியிருக்கும் இந்த முகமூடியை கிழித்து,“நண்பர் பாதுகாப்பு அரசியல்”என்ற புதிய பாவனையை உலகம் முழுக்க வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது. இந்த செய்தி இந்திய அரசியல் மற்றும் பொருளாதார வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகார்த்திகேயன் தான் அதற்கு முழு காரணம்…. மேடையில் ரியோ ராஜ்!

MUST READ