சென்னை அம்பத்தூர் அடுத்த சூரப்பட்டு பகுதியில் பின்னால் வந்த லாரி ஏறி இறங்கியதில் இருசக்கரவாகனத்தை ஓட்டி சென்ற பெண் சம்பவ இடத்திலேயே தலைநசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னை அம்பத்தூர் சூரப்பட்டு பகுதியை சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி கவிதாஞ்சலி. இன்று காலை கவிதாஞ்சலி செங்குன்றத்தில் அமைந்து உள்ள தான் பணிபுரியும் நிறுவனத்திற்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்பொழுது சூரப்பட்டு அருகே சாலையில் பள்ளமாக இருந்ததால் சாலையின் ஓரமாக இரு சக்கர வாகனத்தை ஓட்டி சென்றுள்ளார். அப்போது அவருக்கு பின்னால் அதிவேகமாக வந்த லாரி கவிதாஞ்சலி வந்த இருசக்கர வாகனத்தின் மீது பலமாக மோதியது. இது அவர் ,நிலை தடுமாறி கீழே விழுந்த நிலையில், கவிதாஞ்சலி தலைமீதும் லாரி சக்கரம் ஏறி இறங்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே தலைநசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் தலைமறைவானார்.
இதுகுறித்து தகவல் அறிந்த செங்குன்றம் போக்குவரத்து போலீசார் உடலை கைப்பற்றி பிரத பரிசோதனைக்காக அரசு கீழ்ப்பக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சாலையில் அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள லாரி எண்ணெய் வைத்து லாரி ஓட்டுனரை கைது செய்தனர்.