spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதங்கம் விலை சவரனுக்கு ரூ.144 உயர்வு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.144 உயர்வு

-

- Advertisement -

தங்கம் விலை சவரனுக்கு ரூ.144 உயர்வு

வாரத்தின் முதல் நாளான இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.144 உயர்ந்துள்ளது.

2022 ஆம் ஆண்டில் இந்தியாவின் தங்கத்தின் தேவை 11 சதவீதம் உயர்ந்து 4,741 டன்களாக அதிகரித்துள்ளதாக உலக தங்க கவுன்சில் அறிவித்துள்ளது. 2011 ஆம் ஆண்டுக்கு பிறகு நாட்டில் தங்கத்தின் தேவை 4,741 டன்களாக அதிகரித்தது கடந்த ஆண்டுதான். விழாக்காலமான அக்டோபர்- டிசம்பர் காலாண்டில் தங்க விற்பனை அதிகரித்ததும் ஆர்பிஐ கொள்முதலில் இறங்கியதுமே தங்கத்தின் தேவை அதிகரித்ததற்கு காரணம் என தெரிகிறது.

we-r-hiring

இந்நிலையில் இன்றைய நிலவரப்படி, சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.144 உயர்ந்து ரூ.45,680- க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.18 அதிகரித்து ரூ. 5,775-க்கு விற்பனையாகிறது. சென்னையில் வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 30 காசுகள் உயர்ந்து ரூபாய் 82.70 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 82,700.00 எனவும் விற்பனையாகி வருகிறது

MUST READ