Homeசெய்திகள்2 மாவட்டங்களில் நாளை பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை... புதுச்சேரி,காரைக்காலில் கல்வி நிலையங்களுக்கு 2 நாட்கள்...

2 மாவட்டங்களில் நாளை பள்ளி – கல்லூரிகளுக்கு விடுமுறை… புதுச்சேரி,காரைக்காலில் கல்வி நிலையங்களுக்கு 2 நாட்கள் விடுமுறை!

-

- Advertisement -

கனமழை எச்சரிக்கை காரணமாக கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்காலில் நாளையும், நாளை மறுநாளும் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தாழ்வு மண்டலமாக வலுவிழந்து நாளை மறுநாள் காரைக்கால் – மகாபலிபுரம் இடையே  கரையை கடக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. மேலும் இந்த பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளுக்கு விடுமுறை

இதனை அடுத்து, கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். இதனிடையே, கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை அளித்து, புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது.

MUST READ