Homeசெய்திகள்தமிழ்நாடுடிச.17- ல் மெட்ரோ ரயிலில் 5 ரூபாய் கட்டணத்தில் பயணிக்கலாம் என அறிவிப்பு!

டிச.17- ல் மெட்ரோ ரயிலில் 5 ரூபாய் கட்டணத்தில் பயணிக்கலாம் என அறிவிப்பு!

-

- Advertisement -

 

மெட்ரோ ரயில் நிறுவன நாளையொட்டி, வரும் டிசம்பர் 17- ஆம் தேதி சென்னை மெட்ரோ ரயிலில் 5 ரூபாய் கட்டணத்தில் பயணிக்கலாம் என மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பகலில் கூலி வேலை! இரவில் திருட்டு!! –

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “வடகிழக்கு பருவமழை காரணமாக, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் நிறுவன நாளை முன்னிட்டு மெட்ரோ இரயிலில் ரூ.5 என்ற கட்டணப் பயணத்தில் வரும் டிசம்பர் 17- ஆம் தேதி அன்றும் பயணிக்கலாம்

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் நிறுவன நாளை முன்னிட்டு, டிசம்பர் 03- ஆம் தேதி ஒரு நாள் மட்டும் க்யூஆர் குறியீடு பயணச்சீட்டு (Static QR; Paytm; Whatsapp and PhonePe) முறையை பயன்படுத்தி மெட்ரோ பயணிகள் மற்றும் பொதுமக்கள் மெட்ரோ ரயிலில் ஒருவழிப் பயணத்திற்கு வெறும் 5 ரூபாய் என்ற கட்டணத்தில் பயணம் மேற்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், வடகிழக்கு பருவமழை காரணமாக நாளை (டிச.03) கனமழை, புயல் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மெட்ரோ பயணிகள் அதிகளவில் நாளை (டிச.03) பயணிக்க வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை. இருப்பினும், தவிர்க்க முடியாத காரணத்தினால் மெட்ரோவில் பயணிக்கும் பயணிகள் பாதுகாப்புடன் பயணிக்க வேண்டும்.

இரும்பு கழிவுகளை குறைந்த விலைக்கு வாங்கி தருவதாக ரூ.25 லட்சம் மோசடி செய்த இருவர் கைது!

மெட்ரோ பயணிகளின் நலன் மற்றும் பாதுகாப்பு கருதி, அதிக பயணிகள் இந்த பிரத்யேக கட்டணத்தில் பயணிக்க வேண்டுமென்ற நோக்கத்தோடு ரூபாய் 5 என்ற பயணக் கட்டணத்தில் வருகின்ற வரும் டிசம்பர் 17- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்றும் பயணிகள் பயணிக்கலாம்.

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் மெட்ரோ பயணிகள் மற்றும் பொதுமக்கள் இதனை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறது.” இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ