காணும் பொங்கலை முன்னிட்டு, இன்று (ஜன.17) ஞாயிற்றுக்கிழமை அட்டவணையின் படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது!
காலை 05.00 மணி முதல் இரவு 11.00 மணி வரை சீரான இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெரினா கடற்கரை செல்ல வேண்டுமா?
காணும் பொங்கலை முன்னிட்டு, பொதுமக்கள் மெரினா கடற்கரைக்கு மெட்ரோ ரயில்கள் மற்றும் புறநகர் ரயில்கள் மூலம் செல்வது தொடர்பான விரிவான தகவல் இது.
காணும் பொங்கல்- பாதுகாப்புப் பணியில் 15,000 போலீசார்!
வண்ணாரப்பேட்டை- விமான நிலையம் நீல வழித்தடத்தில் அரசினர் தோட்டத்தில் இறங்கினால் மெரினா கடற்கரைக்கு செல்லலாம். சென்ட்ரல் அல்லது பரங்கிமலையில் பச்சை வழித்தடத்திற்கு மாறி நீல வழித்தடம் வழியாக மெரினா கடற்கரைக்கு செல்லலாம்.
கடற்கரை முதல் வேளச்சேரி வரை உள்ள பறக்கும் ரயில் வழித்தடத்தில் சேப்பாக்கம் ரயில் நிலையத்தில் இறங்கலாம். அரசினர் மெட்ரோ ரயில் நிலையத்தில் இறங்கினால் தீவுத்திடலில் பொருட்காட்சியை அடையலாம்.
பறக்கும் ரயில் வழித்தடத்தில் சிந்தாதிரிப்பேட்டையில் இறங்கி 500 மீட்டரில் தீவுத்திடலை அடையலாம்.