
செந்தில் பாலாஜியைச் சட்டவிரோதமாகக் காவலில் வைத்திருப்பதாக, அவரது மனைவி தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று (ஜூலை 04) தீர்ப்பளிக்கிறது.
பேனா நினைவுச் சின்னம்- வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்!
சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்திருந்தனர். இதைத் தொடர்ந்து, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதைத் தொடர்ந்து, முதலில் சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், நீதிமன்ற உத்தரவுப்படி, காவேரி மல்டி பெஷாலிட்டி மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட அமைச்சருக்கு பைபாஸ் அறுவைச் சிகிச்சை நடைபெற்றது.
இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியைச் சட்டவிரோதமாகக் காவலில் வைத்திருப்பதாக, அவரது மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு தொடர்பாக, அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்ரவர்த்தி அடங்கிய அமர்வு இன்று (ஜூலை 04) காலை 10.30 மணிக்கு தீர்ப்பளிக்கிறது.
மிகவும் எதிர்பார்க்கப்படும் பிரபாஸின் ‘சலார்’….. டீசர் ரிலீஸ் தேதி அப்டேட்!
இதனிடையே, அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது காவேரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.