Homeசெய்திகள்தமிழ்நாடு"மக்களை மீட்பதே அரசின் நோக்கம்"- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி!

“மக்களை மீட்பதே அரசின் நோக்கம்”- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி!

-

- Advertisement -

 

"மக்களை மீட்பதே அரசின் நோக்கம்"- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி!

நெல்லையில் மழை பாதிப்பை ஆய்வு செய்த அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

லால் சலாம் படத்தின் முதல் பாடல் இதோ…

அப்போது பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, “நெல்லை மாவட்டத்தில் 36 கிராமங்கள் மழை நீரால் பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ள நீரின் வேகத்தால் தாமிரபரணி ஆற்றில் பல்வேறு இடங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. நான்கு மாவட்டங்களில் பெரும்பான்மையான இடங்களில் பாதுகாப்புடன் சீரான மின் விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது. மருத்துவமனை உள்ளிட்டவற்றுக்கு துரிதமாக மின்சாரம் தர அறிவுறுத்தப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

அதைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை காப்பாதே அரசின் நோக்கம். தாழ்வான பகுதிகளில் வசிப்போர் அங்கிருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தங்க வேண்டும். தண்ணீர் வடிந்த பின் பயிர் பாதிப்புகளை கணக்கீடு செய்து இழப்பீடு தர நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

எம்ஜிஆர் சொன்ன ஒரு வார்த்தை… நெகிழ்ந்து பேசிய சிரஞ்சீவி…

இதனிடையே, நான்கு மாவட்டங்களுக்கு நிவாரணம் வழங்க தமிழக அரசின் பிரத்யேக வாட்ஸ் அப் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. தன்னார்வலர்கள் 73977- 66651 என்ற வாட்ஸ் அப் எண்ணில் நிவாரணம் குறித்து தொடர்புக் கொள்ளலாம்

MUST READ