- Advertisement -
ராமநாதபுரத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (அக்.30) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
ஆந்திராவில் ரயில் விபத்து- 6 பேர் உயிரிழப்பு!
வடகிழக்கு பருவமழை தொடங்கி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில், இன்று (அக்.30) கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் லேசானது முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
அதன்படி, அதிகாலை முதலே ராமநாதபுரம் மாவட்டத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (அக்.30) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.