spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதி மு கவின் தலைவராக எட்டாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் முதல்வர் – செல்வப்பெருந்தகை வாழ்த்துகள்

தி மு கவின் தலைவராக எட்டாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் முதல்வர் – செல்வப்பெருந்தகை வாழ்த்துகள்

-

- Advertisement -

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக பொறுப்பேற்று இன்று எட்டாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவா்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளாா்.தி மு கவின் தலைவராக எட்டாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் முதல்வர் – செல்வப்பெருந்தகை வாழ்த்துகள்மேலும், இது குறித்து தனது வலைத்தளப்பக்கத்தில், ”திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று இன்று எட்டாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார். இந்நிகழ்வில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாகவும், எனது தனிப்பட்ட சார்பாகவும், மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். சமூக நீதி, சமத்துவம், அன்பு, மனிதநேயம் ஆகிய தத்துவங்களை வழிகாட்டியாகக் கொண்டு, தந்தை பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரின் கோட்பாடுகளை மக்கள் வாழ்வில் செயலாக்கி வரும் அரிய தலைமைத்துவம் கொண்டவர் மு.க. ஸ்டாலின்.

கடந்த ஆண்டுகளில் கட்சியின் ஒற்றுமையையும் வலிமையையும் வளர்த்ததோடு மட்டுமல்லாது, தமிழக அரசியலில் மக்கள் நம்பிக்கையை பலமடங்கு உயர்த்தியுள்ளார். தமிழக மக்களின் உரிமை, நலன், வளர்ச்சி ஆகியவற்றிற்காக எப்போதும் உறுதியான குரலாக இருந்து வருகிறார். இந்நாளில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக வெற்றிகரமாக எட்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாகவும், எனது இதயப்பூர்வமான வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளாா்.

அமித்ஷா உடன் சென்ற அந்த தலைவர்! நயினார் வீட்டில் நடந்த ரகசிய சந்திப்பு! உண்மையை உடைக்கும் தாமோதரன் பிரகாஷ்!

we-r-hiring

MUST READ