Homeசெய்திகள்தமிழ்நாடு"சபாநாயகர் மரபை மீறிச் செயல்படுகிறார்" -எடப்பாடி பழனிசாமி பேட்டி!

“சபாநாயகர் மரபை மீறிச் செயல்படுகிறார்” -எடப்பாடி பழனிசாமி பேட்டி!

-

- Advertisement -

 

"சபாநாயகர் மரபை மீறிச் செயல்படுகிறார்" -எடப்பாடி பழனிசாமி பேட்டி!
Video Crop Image

எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை விவகாரத்தைக் கண்டித்தும், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கையை ஓ.பன்னீர்செல்வத்துக்கு பதில் ஆர்.பி.உதயக்குமாருக்கு வழங்கக்கோரியும், தமிழ்நாடு சட்டப்பேரவையில் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து, சபாநாயகர் அப்பாவு, அ.தி.மு.க. உறுப்பினர்களை அவைக் காவலர்களால் வெளியேற்ற உத்தரவிட்டார். இதையடுத்து, அ.தி.மு.க. உறுப்பினர்கள் முழக்கமிட்டவாறு, அவைக் காவலர்களால் வெளியேற்றப்பட்டனர்.

பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசியில் அழைத்த இஸ்ரேல் பிரதமர்!

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், அக்கட்சியின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, “சபாநாயகர் தனது மரபை மீறி செயல்படுகிறார்; எதிர்க்கட்சித் துணைத் தலைவர், எதிர்க்கட்சித் தலைவருக்கு அருகில் தான் அமர வைக்கப்பட வேண்டும். சபாநாயகர் நடுநிலையோடு செயல்பட வேண்டும். அ.தி.மு.க. உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர் பதிலளிக்கும் முன் சபாநாயகரே பதிலளிக்கிறார்.

திருமுருகனுக்கு அமைச்சர் பதவியை வழங்க உள்ளதாக தகவல்!

ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட மூன்று பேரும் எந்த கட்சியையும் சாராதவர்கள் என பலமுறைக் கடிதம் கொடுத்துள்ளோம். ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டது செல்லும் என நீதிமன்றமே கூறியுள்ளது. இருக்கை ஒதுக்கீடு குறித்த கோரிக்கைகளை நிறைவேற்றாதது ஏன் என சபாநாயகர் விளக்கம் அளிக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

MUST READ