வானதி சீனிவாசன் அலுவலகத்தில் புகுந்த நபர் மர்ம மரணம்
பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் அலுவலகத்தில் புகுந்த நபர் மர்ம முறையில் மரணமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை – ஓசூர் சாலையில் கோவை பாஜக தெற்கு எம்எல்ஏ வானதி சீனிவாசன் அலுவலகம் உள்ளது. நேற்று மாலை 5.50 மணியளவில் பாஜக அலுவலகத்திற்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் நுழைந்தார். வானதி சீனிவாசன் அலுவலகத்திற்குள் புகுந்த மர்ம நபரை, அங்கிருந்தவர்கள் பிடித்து வெளியே தள்ளினர். வெளியேற்றப்பட்ட நபர் அடுத்த சில மணி நேரத்தில் சாலையோரம் சடலமாக மீட்கப்பட்டார். வானதி சீனிவாசன் அலுவலகத்திற்குள் நுழைந்த இளைஞரை பாஜகவினர் தாக்குதல் நடத்தி விரட்டியடித்த சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அலுவலகத்துக்குள் நுழைந்து உள்பக்கமாக தாழிட முயன்றதாக கூறி இளைஞரை அங்கிருந்து உதவியாளர் வெளியே தள்ளினார். இதில் அலுவலகத்துக்கு வெளியே சென்று, அந்த நபர் சாலையில் விழுந்த காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்நிலையில் அவரது சடலம் அன்றைய இரவு 8 மணியளவில் அண்ணா சிலை சிக்னல் அருகே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவரது சடலத்தை கைப்பற்றிய போலீசார் சம்பந்தப்பட்ட நபர் மதுபோதையில் உயிரிழந்தாரா? அல்லது வாகன விபத்து ஏற்பட்டாரா? என விசாரணை நடத்திவருகின்றனர்.