காமராஜர் குறித்த விவாதம் முடிந்து அதற்கு நேற்றே முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளாா்.அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை நேரில் சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த செல்வப்பெருந்தகை, ”தமிழ்நாட்டில் அதிகம் ஜி.எஸ்.டி வரி செலுத்தக்கூடிய தொகுதியாக ஸ்ரீபெரும்புதூர் தொகுதி உள்ளது. இங்கு சாலைகள் மேம்படுத்தப்பட வேண்டும் என்றும் தொகுதி மக்களின் பிரச்சினைகளையும் மனுவாக ஊராட்சி தலைவர்களிடம் பெற்று ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு உடன் இணைந்து முதலமைச்சரிடம் கோரிக்கை மனுவாக கொடுத்துள்ளோம் என்றார்.
மேலும், முதலமைச்சர் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருகிறேன் என உறுதியளித்துள்ளதாக அவர் தெரிவித்தார். தொடர்ந்து திருச்சி சிவா காமராஜர் குறித்து பேசியது தொடர்பான கேள்விக்கு, காமராஜர் குறித்த விவாதம் முடிந்துவிட்டது. அதற்கு நேற்று முற்றுப்புள்ளி வைத்தாகிவிட்டது என்றார்.

அப்போது திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேற வேண்டும் என அண்ணாமலை கூறி உள்ளாரே என்ற கேள்விக்கு ஆடு நினைகிறதே என்று ஓநாய் நினைக்கிறது என்பது போன்று எங்களை பற்றி அண்ணாமலைக்கு ஏன் கவலை என்றும் காமராஜரை கொலை செய்ய முயற்சி செய்தது யார் என்று செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பேசிய அவர், டெல்லியில் காமராஜரை வீட்டோடு வைத்து கொலை செய்ய முயற்சி செய்தவர்கள் அதற்குப் பிறகு காமராஜருக்கு பிறந்தநாள் விழா எடுப்பது போன்று வேசம் போடுகிறார்கள் என்றார். பாஜக,ஆர்.எஸ்.எஸ் வேசத்தை தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்” என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளாா்.
நிதிப் பற்றாக்குறை என்ற பழைய பல்லவியையே பாடும் திமுக அரசு – அன்புமணி விமர்சனம்