spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கொடநாடு வழக்கு டிசம்பர் 20ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு... இபிஎஸ்-க்கு சிபிசிஐடி விசாரனையா?

கொடநாடு வழக்கு டிசம்பர் 20ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு… இபிஎஸ்-க்கு சிபிசிஐடி விசாரனையா?

-

- Advertisement -

கொடநாடு வழக்கு டிசம்பர் 20ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு... இபிஎஸ்-க்கு சிபிசிஐடி விசாரனையா?

கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் தேவைபட்டால் எடப்பாடி பழனிச்சாமியிடமும் விசாரணை நடத்தபடும் என அரசு தரப்பு வழக்கறிஞர் சாஜகான் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் கொடநாடு கொலை கொள்ளை தொடர்பான வழக்கின் மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வந்த போது உயர் நீதிமன்ற நீதிபதி எடப்பாடி பழனிச்சாமியிடம் ஏன் விசாரிக்க கூடாது? என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

இந்த நிலையில் இன்று உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை வந்த போது சிபிசிஐடி போலீசார் தரப்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர்கள் ஷாஜகான் மற்றும் கனகராஜ் ஆகியோர் ஆஜராகி புலன் விசாரணை நடைபெற்று வருவதால் கால அவகாசம் கேட்டனர்.

அதனை அடுத்து வழக்கு விசாரணை டிசம்பர் 20ஆம் தேதிக்கு மாவட்ட நீதிபதி முரளிதரன் உத்தரவிட்டார்.

வழக்கு விசாரணைக்கு பின் நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த அரசு தரப்பு வழக்கறிஞர் ஷாஜகானிடம் செய்தியாளர்கள் கேட்டபோது: அதிமுக நிர்வாகி சஜீவனிடம் நேற்று விசாரணை நடத்தப்பட்டதாகவும் புலன் விசாரணையின் போது ஒவ்வொருவரையும் விசாரிக்க வேண்டியது விசாரணை அதிகாரியின் கடமை என்றும் அதன்படி சஜீவனிடம் விசாரணை நடத்தப்பட்டதாகவும் கூறினார்.

எடப்பாடி பழனிச்சாமி இடம் விசாரிக்க வேண்டும் என குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டதாகவும் அந்த வழக்கு விசாரணையின் போது எடப்பாடி பழனிச்சாமியை எதிரி தரப்பு சாட்சியாக விசாரிக்க வேண்டும் என குற்றம்சாட்டபட்டவர்கள் கேட்டு கொண்டதாகவும் ஆனால் தற்போது வழக்கு புலன் விசாரணை கட்டத்தில் இருப்பதால் யார் யாரை விசாரிக்க வேண்டும் என்பதை விசாரணை அதிகாரிகள் தான் முடிவு செய்வார்கள் என்றார்.

ஆனால் தற்போது சிபிசிஐடி போலிசார் புலன் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதால் வழக்கில் தொடர்புடையவர்கள், தகவல்கள் மற்றும் ஆதாரங்களை வைத்து விசாரணை நடத்தி வருவதாகவும் அதில் அரசு தரப்பு சாட்சியாக இருந்தாலும் அல்லது எதிரி தரப்பு சாட்சியாக இருந்தாலும் விசாரிக்கப்படுவார்கள் என்றார்.

தற்போது வழக்கு விசாரணை இன்டர் போல் மற்றும் பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் முடிவுகளும் இன்னும் வராமல் இருப்பதாகவும் விசாரணையின் போது கிடைக்கும் தகவலின் அடிப்படையில் யாரை வேண்டுமானாலும் விசாரிக்கலாம் என்றார்.

கொடநாடு கொலை கொள்ளை வழக்கு குறித்து சசிகலாவிடம் விசாரணை நடத்தியது போல எடப்பாடி பழனிச்சாமி இடமும் விசாரிக்க வாய்ப்பு உள்ளதா? என செய்தியாளர்கள் கேட்டபோது தேவைப்பட்டால் அவரிடமும் விசாரிக்கப்படும் என்றும் வழக்கில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் விசாரிக்கப்படுவார்கள் என்றார்.

வாய் குடுத்து மாட்டிக்க நான் தயார் இல்லை – நடிகை கஸ்தூரி

 

MUST READ