- Advertisement -
தமிழ்நாடு பசுமை இயக்கம் மூலம் 10 கோடிக்கும் அதிகமான மரக்கன்றுகளை நட்டுள்ளோம். இந்தியாவிலேயே அதிக அளவிலான ராம்சார் இடங்கள் உள்ள மாநிலம் தமிழ்நாடு என முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்று வரும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அதில், “வனக்காவலர்கள் நியமன ஆணைகளை வழங்கியதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். நீங்கள் தான் காடுகளின் முதுகெலும்பு, நமது சுற்றுச்சூழலை பாதுகாக்கும் ஹீரோக்கள் நீங்கள் தான். தமிழ்நாடு பசுமை இயக்கம் மூலம் 10 கோடிக்கும் அதிகமான மரக்கன்றுகளை நட்டுள்ளோம். இந்தியாவிலேயே அதிக அளவிலான ராம்சார் இடங்கள் உள்ள மாநிலம் தமிழ்நாடு” என கூறினாா்.
20 வருட கொடுமை! பெரியப்பாவின் சாதி வெறி! கொதிக்கும் கரு.பழனியப்பன்!