spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுபுயல், மழை, வெள்ளமென ஓயாமல் உழைக்கும் தூய்மைப் பணியாளர்கள் – முதல்வர் பெருமிதம்

புயல், மழை, வெள்ளமென ஓயாமல் உழைக்கும் தூய்மைப் பணியாளர்கள் – முதல்வர் பெருமிதம்

-

- Advertisement -

நாளும் நம் நகரங்கள் இயங்க நள்ளிரவு, புயல், மழை, வெள்ளம் என எந்நேரமும் ஓயாமல் உழைக்கும் தூய்மைப் பணியாளர்களின் மாண்பினை நமது திராவிட மாடல் அரசு ஒருபோதும் விட்டுக் கொடுக்காது என தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.புயல், மழை, வெள்ளமென ஓயாமல் உழைக்கும் தூய்மைப் பணியாளர்கள் – முதல்வர் பெருமிதம்மேலும், இதுகுறித்து தனது வலைத்தளப்பக்கத்தில் அவா் கூறியிருப்பதாவது, ”4 ஆண்டுகளில் அவர்களுக்காக நாம் நிறைவேற்றியுள்ள பல நலத்திட்டங்களோடு, அவர்களின் மற்ற நியாயமான கோரிக்கைகளையும் பரிசீலித்து,

தூய்மைப் பணியாளர்களுக்குக் காலை உணவு

we-r-hiring

தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகளுக்கு உயர்கல்வி ஊக்கத்தொகை

தூய்மைப் பணியாளர்களின் குடும்பத்தினருக்குச் சுயதொழில் உதவி

தூய்மைப் பணியாளர்களின் நலவாழ்வுக்காக ரூ.10 லட்சம் காப்பீடு

தூய்மைப் பணியாளர்களுக்கு 30 ஆயிரம் வீடுகள்/குடியிருப்புகள்

பணியின்போது இறக்க நேரிட்டால் ரூ. 10 லட்சம் நிவாரண நிதி

தூய்மைப் பணியாளர்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் கண்டறிவதற்கும், சிகிச்சை அளிப்பதற்கும் தேவையான தனித்திட்டம்

முதலிய புதிய நலத்திட்டங்களையும் செயல்படுத்தியது இந்த திராவிட மாடல் அரசு. இந்த அரசு என்றும் உங்களுடன் உங்களுக்காக நிற்கும் எளியோரின் அரசு என தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.

2 கார்கள் மீது கனரக லாரி கவிழ்ந்து விபத்து!

MUST READ