ரூபாய் 1,000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு ஜனவரி 10- ஆம் தேதி முதல் விநியோகம் செய்யும் பணி தொடங்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தென் கொரியா மீது தாக்குதல் நடத்திய வட கொரியா…கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம்!
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “வரும் ஜனவரி 10- ஆம் தேதி முதல் ஜனவரி 13- ஆம் தேதி வரை பொங்கல் பரிசுத் தொகுப்பினை ரேஷன் கடைகளில் பொதுமக்கள் பெற்றுக் கொள்ளலாம். ஜனவரி 13- ஆம் தேதிக்குள் பொங்கல் பரிசுத் தொகுப்பைப் பெற முடியாதவர், வரும் ஜனவரி 14- ஆம் தேதி பெற்றுக் கொள்ளலாம்.
வங்கதேசத்தில் பயணிகள் ரயிலில் தீ விபத்து – 5 பேர் உடல் கருகி பலி
பொங்கல் தொகுப்பிற்கு நாளை (ஜன.07) முதல் ஜனவரி 09- ஆம் தேதி வரை ரேஷன் கடைகளில் டோக்கன்கள் வழங்கப்படும். சர்க்கரை அட்டை, பொருளில்லா அட்டைத்தாரர்கள் மற்ற ரேஷன் அட்டைத்தாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பரிசுத் தொகுப்பில் என்னென்ன இருக்கும்?
பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரூபாய் 1,000 ரொக்கம், 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, வேட்டி, சேலைகள் இடம் பெற்றிருக்கும்.