spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுசெந்தில் பாலாஜி ராஜினாமா- ஆளுநர் ஒப்புதல்!

செந்தில் பாலாஜி ராஜினாமா- ஆளுநர் ஒப்புதல்!

-

- Advertisement -

 

அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!
Photo: Minister Senthil Balaji

அமைச்சர் பதவியில் இருந்து விலகிய செந்தில் பாலாஜியின் ராஜினாமாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.

we-r-hiring

இயக்குனர் மணிகண்டன் வீட்டில் கொள்ளை…. மன்னிப்பு கடிதத்தை விட்டு சென்ற மர்ம நபர்கள்!

சட்டவிரோதப் பணப்பரிமாற்றத் தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத்துறையால் கடந்த 2023- ஆம் ஆண்டு ஜூன் மாதம் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட நிலையில், சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதைத் தொடர்ந்து, செந்தில் பாலாஜி வசம் இருந்த அமைச்சர் இலாகாக்கள், அமைச்சர்கள் முத்துசாமி, தங்கம் தென்னரசுவிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர், செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நீடித்தார்.

செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர். இதனிடையே, செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமீன் கோரி கீழமை நீதிமன்றம் முதல் உச்சநீதிமன்றம் வரை தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டனர்.

தளபதி லுக்கில் தெறிக்கவிடும் ரஜினி…..’தலைவர் 171′ படத்தின் ஷூட்டிங் அப்டேட்!

இது செந்தில் பாலாஜி தரப்புக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்பட்டதுடன், செந்தில் பாலாஜியை எப்போதும் வேண்டுமானாலும் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கலாம் என கூறப்பட்டது. சுமார் 8 மாதங்களாக சிறையில் உள்ள செந்தில் பாலாஜி நேற்று (பிப்.12) தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இதற்கான கடிதத்தை ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைத்தார்.

இந்த நிலையில், செந்தில் பாலாஜியின் அமைச்சர் பதவி ராஜினாமா கடிதத்தை ஆளுநர் ஏற்றுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக, ஆளுநர் மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது.

MUST READ