Homeசெய்திகள்கட்டுரைபீகாரில் மோடி! காஷ்மீரில் ராகுல்! வடஇந்தியாவிற்கு வரப்போகும் ஆபத்து!

பீகாரில் மோடி! காஷ்மீரில் ராகுல்! வடஇந்தியாவிற்கு வரப்போகும் ஆபத்து!

-

- Advertisement -

அணு ஆயுதங்களை கொண்டிருக்கும் இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே போர் மூண்டால் பெரிய பாதிப்பு ஏற்படும். குறிப்பாக வட இந்தியா பெரிய அளவில் பாதிப்பிற்குள்ளாகும் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் எச்சரித்துள்ளார்.

இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் மூலம் சூழல் ஏற்ட்டுள்ள நிலையில், அதனை தவிர்க்க வேண்டியதன் அவசியம் குறித்தும், பிரதமர் மோடியின் செயல்பாடுகள் குறித்தும்  மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் யூடியூப் சேனல் ஒன்றுக்கு நேர்காணல் அளித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:  பஹல்காம் தாக்குதலை அடுத்து சவுதி அரேபியா பயணத்தை பாதியில் முடித்துவிட்டு இந்தியா திரும்பிய பிரதமர் மோடி, இறந்தவர்களை சென்று பார்க்கவோ, அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்லவோ இல்லை. மாறாக ஆண்டின் இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள பீகார் மாநிலத்திற்கு சென்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார்கள். பீகாரில் தேர்தல் வருடக் கடைசியில் நடைபெற உள்ளது. இதை தேர்தல் பிரச்சினையாக மாற்ற வேண்டிய அவசியமே இல்லை. அவர் மொத்தமாக இந்தியில் பேசுகிறார். குறிப்பிட்ட பகுதியை மட்டும் ஆங்கிலத்தில் சொல்லி, இது உலகநாடுகளுக்கு போய் சேர வேண்டும் அவரே சொல்கிறார். அவர்களை விட மாட்டேன் என்று மார்தட்டிக் கொள்கிற விஷயத்தை ஆங்கிலத்தில் சொல்கிறார். அப்போது அவரது உள்நோக்கம் புரிகிறது.

அது இந்து - முஸ்லிம் மோதல் இல்லை .... பஹல்காம் தாக்குதல் குறித்து காஜல் அகர்வால்!

இதனுடைய உண்மையான சிக்கல் எதில் போய் முடிகிறது என்றால், போர் நடந்தால் பீகார் மாநிலமும் பாதிக்கப்படும். சொல்லப் போனால் போரால் வடஇந்தியா முழுவது பாதிக்கப்படும். 2 நாடுகளும் அணுஆயும் கொண்ட நாடுகளாகும். அணு ஆயுதப்பிரயோம் நடந்தாலே உள் மாநிலங்கள் பெரிய அளவில் பாதிக்கப்படும். அப்போது இதுபோன்ற எஸ்கலேஷன் தவறாகும். பாகிஸ்தானில் என்ன பிரச்சினை என்றால்? ஒரு தீப்பொறி கூட பற்றிவிடும். அந்த நாட்டின் ஆட்சியே காலியாகிவிட்டது. மீண்டும் ராணுவ ஆட்சி முறை போன்றுதான் உள்ளது. பாகிஸ்தான் தளபதி, காஷ்மீர் தங்களுக்கு கழுத்து நரம்பு போன்றது. நாங்கள் அதை விட மாட்டோம் என்று தேவை இல்லாமல் பேசுகிறார். அப்போது அவர்கள் எதற்கும் தயாராக உள்ளனர்.

ஆனால் நாம் எதற்கும் தயாராக இருக்க வேண்டும் என்று சொன்னாலும், உண்மையில் அது நமக்கு நல்லது அல்ல. இவ்வளவு பெரிய படுகொலை நடக்கிறபோது, பிற நாடுகள், அந்த நாடுகளின் அடிப்படையான மனிதாபிமான உணர்வுகள் இதை நாம் பாகிஸ்தானுக்கு எதிரான மனநிலையை உருவாக்குவதற்கு, நாம் அதை சரியான முறையில் கையாண்டோமா? என்று கேள்வி எழுகிறது. நீங்கள் பீகாரில் சென்று இப்படி பேசுகிறபோது, பிற நாடுகள் என்ன நினைக்கிறது, இதில் அரசியல் செய்கிறார்கள் என்று தான் நினைக்கும்.

மகாராஷ்டிரா தேர்தல் முடிவு; முதலமைச்சர் தேர்வில் பெரும் குழப்பம்

பஹல்காமுக்கு ராகுல்காந்தி போயியுள்ளார். ஆனால் பிரதமர் மோடி போகவில்லை. முஸ்லிம்கள் இந்துக்களை கொன்றுவிட்டார்கள் என்று ஆர்எஸ்எஸ் அஜெண்டாவை வைத்து அரசியல் செய்வதற்காக கூட அவர் போயிருக்கலாம். இந்த தாக்குதலின் போது சுற்றுலாப் பயணிகளை காப்பாற்றிய குதிரை ஓட்டி ஒரு இஸ்லாமியர் என்பதை மறைக்கிறார்கள். அந்த கிராமத்தில் உள்ள எல்லோரும் சேர்ந்து அவருக்கு இறுதிச்சடங்குகளை செய்தார்கள். நியாயமாக பார்த்தால் உயிரிழந்த 26 பேரில் 2 பேர் இஸ்லாமியர்கள். அவர்கள் இந்துக்கள் உயிரை காப்பாற்றுவதற்காக உயிர்த் தியாகம் செய்தார்.

எங்கள் நாட்டில் இந்து முஸ்லிம் ஒற்றுமையுடன் இருக்கிறோம் என்று பெருமிதம் பட்டிருக்க வேண்டிய விஷயம் இதுவாகும். இதனை மத்திய அரசு சொல்ல வில்லை. ஆனால் இந்து பெண்கள் சொல்லியிருக்கிறார்கள். சிலர் தீவிரவாதிகளை கண்டால் சுட்டுக்கொல்ல வேண்டும் என்று பொது புத்தியில் சொல்லி இருக்கிறார்கள். ஆனால் அது சாத்தியமில்லாத விஷயமாகும். அது தவறு கிடையாது. பாதிக்கப்பட்டவர்களின் நியாயமான கோபமாகும். அதிகாரத்தின் அண்மையில் இருப்பவர்கள் இப்படியான உணர்வுகளை எடுக்கிறபோது விபரீதமாகும்.

பிரதமருக்கு தற்போது உள்ள நெருக்கடி என்ன? 75 வயது ஆகிறது. பதவியை விட்டு விலகுங்கள் என்று ஆர்எஸ்எஸ் சொல்கிறது. ஆனால் எப்படி மாறுகிறது. மோடி இல்லாமல் எதுவும் செய்ய முடியாது. அவர்தான் இந்த நாட்டின் காவலர் என்று மாறுகிறது.வயதானால் என்ன? 95 வயது வரை அவர்தான் பிரதமர் என்ற பிம்பத்தை கட்டமைக்கிறார். ஒரு துர்பாக்கியமான நிகழ்வை அரசியலுக்காக பயன்படுத்து -கிறார்கள். போர் அறிவித்தாலே நாட்டில் பங்குச்சந்தைகள் காலியாகிவிடும். பதுக்கல் கூடிவிடும். ரொம்ப பிரச்சினையாகும்.

தாக்குதல் நடைபெற்ற அனந்த்நாக் பகுதி மிகவும் உள்ளே உள்ள பகுதியாகும். வனப்பகுதிக்குள் சுற்றுலா பயணிகளை அனுமதிப்பது தவறாகும். உளவுத்துறை முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்திருந்தால் நாம் சுற்றுலா பயணிகளை அனுமதித் திருக்கக் கூடாது. சம்பவம் நடைபெற்று சில மணி நேரங்களுக்கு பின்னர் தான் பாதுகாப்பு படையினர் அங்கே சென்றுள்ளனர். பகல்காம் தாக்குதல் விவகாரத்தில் சிஸ்டம் பெயிலியர் நிறைய உள்ளது. ஆனால் அதற்கு யாரும் பொறுப்பேற்காத வகையில் அரசியலை கொண்டு வருகிறார்கள், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ