Homeசெய்திகள்ஆவடிசென்னை புறநகர் ஆவடி பகுதியில் வெளுத்து வாங்கிய மழை...

சென்னை புறநகர் ஆவடி பகுதியில் வெளுத்து வாங்கிய மழை…

-

- Advertisement -

சென்னை புறநகர் பகுதியான ஆவடியில் 1 மணி நேரம் பலத்த காற்றுடன் வெளுத்து வாங்கிய மழை…

சென்னை புறநகர் பகுதியில் ஆவடியில் 1 மணி நேரம் பலத்த காற்றுடன் வெளுத்து வாங்கிய மழை...

சென்னை புறநகர் பகுதியில் திருமுல்லைவாயல், அம்பத்தூர், ஆவடி பட்டாபிராம் பூந்தமல்லி உள்ளிட்ட சுற்று வட்டார இடங்களில் 1மணி நேரம் கன மழை பெய்தது.

சென்னை புறநகர் பகுதியில் கடந்த 2 நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகம் இருந்து வந்த நிலையில் இன்று மாலை திடீரென கருமேகம் சூழ்ந்து பலத்த காற்றுடன் கன மழை பெய்த நிலையில் ஆவடி சுற்று வட்டார பகுதி, ஆவடி புதிய ராணுவ சாலை, கோவில் பதாகை மற்றும் திருமுல்லைவாயில், சரஸ்வதி நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில்1 மணி நேரமாக கன மழை பெய்தது.

சென்னை புறநகர் பகுதியில் ஆவடியில் 1 மணி நேரம் பலத்த காற்றுடன் வெளுத்து வாங்கிய மழை...

குறிப்பாக ஆவடி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் சாலைகளில் மழை நீர், வெள்ளம் போல் தேங்கி உள்ளது. அதேபோல் புதிய ராணுவ சாலைகளிலும் மழை வெளுத்து வாங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிகுள்ளாயினர்.  மழையின் காரணமாக ஆவடியில் இருந்து பூந்தமல்லி செல்லக்கூடிய சாலையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியதால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

அதேபோல் பட்டாபிராம், இந்துக்கல்லூரி, அண்ணா நகர், சேக்காடு, திருமுல்லைவாயில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கன மழை காரணமாக வணிக வளாகங்களுக்கு செல்ல இயலாததால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

MUST READ