திருமுல்லைவாயலில் உள்ள அரசு பள்ளியில் இன்று குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, அப்பள்ளி மாணவர்களுடன் அமைச்சர் சா.மு.நாசர் அமர்ந்து, காலை உணவை சாப்பிட்டார்.
ஆவடி, திருமுல்லைவாயல், சத்தியமூர்த்தி நகரில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் இன்று குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு இன்று காலை அங்கு படிக்கும் மாணவ, மாணவியருடன் அமைச்சர் சா.மு.நாசர் ஒன்றாக அமர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் துவங்கி வைத்த காலை உணவு திட்டத்தின்படி தயாரிக்கப்பட்ட காலை உணவினை சாப்பிட்டார். அவருடன் ஆவடி மாநகராட்சி மேயர் உதயகுமார், ஆணையர் சரண்யா, மாநகர செயலாளர் சண்பிரகாஷ், மண்டல தலைவர் அமுதா பேபிசேகர், பகுதி செயலாளர்கள் பேபிசேகர், பொன் விஜயன், வழக்கறிஞர் வினோத் உட்பட பலரும் கலந்து கொண்டு உணவு சாப்பிட்டனர்.
பீகாரில் மீண்டும் ஆட்சி அமைக்கிறது என்.டி.ஏ கூட்டணி! தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது பாஜக!



