Homeசெய்திகள்ஆவடிதேர்வாய் கண்டிகை ஏரியிலிருந்து ஆவடிக்கு குடிநீர் வழங்க திட்டம் - அமைச்சர் கே.என் நேரு பேட்டி

தேர்வாய் கண்டிகை ஏரியிலிருந்து ஆவடிக்கு குடிநீர் வழங்க திட்டம் – அமைச்சர் கே.என் நேரு பேட்டி

-

- Advertisement -

ஆவடி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய தேர்வாய் கண்டிகை புதிய கூட்டு குடிநீர் திட்டம் ஆவடிக்கு விரைவில் செயல்படுத்தப்படும் என அமைச்சர் கே.என் நேரு தெரிவித்துள்ளார்.

தேர்வாய் கண்டிகை ஏரியிலிருந்து ஆவடிக்கு குடிநீர் வழங்க திட்டம் - அமைச்சர் கே.என் நேரு பேட்டி

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 100 கோடி மதிப்பீட்டில் குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை திட்ட பணிகள் துவக்க நிகழ்வு பட்டாபிராம் சத்திரம் பள்ளி வளாகத்தில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு உயர்மட்ட நீர் தேக்க தொட்டியை நகராட்சி நிர்வாகம் துறை அமைச்சர் கே.என் நேரு,அமைச்சர் நாசர் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

தேர்வாய் கண்டிகை ஏரியிலிருந்து ஆவடிக்கு குடிநீர் வழங்க திட்டம் - அமைச்சர் கே.என் நேரு பேட்டி

குழாயைத் திறந்து பொதுமக்களுக்கு தண்ணீர் விநியோகத்தை தொடங்கி வைத்த அமைச்சர் கே.என் நேரு கையில் தண்ணீரை ஏந்தி குடித்து ருசித்துப் பார்த்தார்.

தேர்வாய் கண்டிகை ஏரியிலிருந்து ஆவடிக்கு குடிநீர் வழங்க திட்டம் - அமைச்சர் கே.என் நேரு பேட்டி

இதனை தொடர்ந்து ஆவடி மாநகராட்சி பகுதிகளில் வெள்ள காலங்களில் பொதுமக்களுக்கு உதவிடும் வகையில் தன்னார்வலர்களுக்கு சீருடை வழங்கினார்.

தேர்வாய் கண்டிகை ஏரியிலிருந்து ஆவடிக்கு குடிநீர் வழங்க திட்டம் - அமைச்சர் கே.என் நேரு பேட்டி

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நேரு,”ஆவடியில் புதிய கூட்டு குடிநீர் திட்டம் தேர்வாய் கண்டிகை ஏரியிலிருந்து ஆவடிக்கு குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மழை வருது! மழை வருது! வந்தா தண்ணீர் எடு! தண்ணீர் எடு! என கூறுகிறீர்கள். குடிநீர் ஏரிகள் காலியாக உள்ளது. நிரம்ப வேண்டியுள்ளது ஆகையால் மழை தேவை. செம்பரம்பாக்கம், பூண்டி ஏரி பகுதிகளில் நீர்வரத்து பகுதிகளில் மழை பெய்ய கூடும் என தெரிவித்துள்ளனர். அப்படி வரும் சூழலில் குடிநீர் பற்றாக்குறை தீரும். குடிநீர் வரத்து பகுதிகளில் தூர்வாரும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. மழை வரட்டும், குடிநீர் ஏரிகள் நிரம்பட்டும்,ஆண்டு முழுவதும் குடிநீர் தேவை உள்ளது இரண்டு நாள் மழையை மக்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும் என கூறினார்.

சென்னை மாநகராட்சி அவசரகால கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதலமைச்சர் ஆய்வு

 

MUST READ