தெற்கு ரயில்வேயின் பணிகள் இன்று முதல் புதுப்பிக்கப்படுகிறது. இதன் காரணமாக பயணிகள் தங்களது பயணத்தை திட்டமிட்டு செல்லுமாறு ரயில்வே நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
சென்னை எழும்பூர் ரயில் நிலைய மறுமேம்பாட்டுப் பணிகளை ஆதரிக்க, தெற்கு ரயில்வே பிப்ரவரி 22 முதல் ஏப்ரல் 06, 2026 வரை சென்னை எழும்பூர் வழியாகச் செல்லும் சில விரைவு ரயில்களை மாம்பலம் ரயில் நிலையத்தில் தற்காலிகமாக நிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பான ரயில்களின் பட்டியலைச் சரிபார்த்து, உங்கள் பயணத்தைத் திட்டமிடுமாறு பயணிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
மேலும் சில எக்ஸ்பிரஸ் ரயில்கள் வேகம் குறைப்பு மற்றும் மாற்றுப் பாதையில் செல்லக்கூடும் எனவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. துல்லியமான ரயில் எண்கள் மற்றும் நேர மாற்றங்களுக்கு, அதிகாரப்பூர்வ Southern Railway அறிவிப்புகளைச் சரிபாா்த்து செல்ல பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.



