குயின் டிரேடிங் என்ற பெயரில் பங்குச்சந்தையில் முதலீடு இரு மடங்கு லாபம் எனக்கூறி 24 கோடி ரூபாய் மோசடி செய்ததாக மாவட்ட ஆட்சியரிடம் புகார்.மதுரை மாவட்டம் கடச்சனேந்தலை சேர்ந்த புதூர் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரியும் ரமேஷ் தங்கராஜ் மற்றும் அவரது மனைவி பிரேமலதா ஆகிய இருவரும் QUEEN டிரேடிங் என்ற பெயரில் பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் இருமடங்கு லாபம் தருவதாக பலரிடம் லட்சகணக்கில் முதலீடு பெற்றுள்ளனர்.
இவர்களுடைய பங்குச்சந்தையில் முதலீடு செய்த நிலையில் 3 மாதங்களான முதலீட்டிற்கான லாப தொகையினை வழங்கியுள்ளனர் இதனையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் லாபம் இல்லாத நிலையில் பணத்தை திரும்ப ஒப்படைப்பதாக இருவரும் கூறிய நிலையில் பிப்ரவரி 24ஆம் தேதி முதல் இருவரையும் தொடர்பு கொள்ள முயன்ற போது செல்போனில் தொடர்பு கொள்ள இயலாத நிலை ஏற்பட்டதாகவும் இது தொடர்பாக பாதிக்கப்பட்ட முதலீட்டார்கள் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் மாநகர காவல் ஆணையர் அலுவலகம் மற்றும் பொருளாதார குற்றப்பிரிவிலும் புகார் அளித்தனர்.ஆனால் இதுவரையும் எந்த நடவடிக்கை எடுக்கப்டவில்லை.எனவே மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுத்து தங்களுடைய பணத்தை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி மீண்டும் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.ஆயிரக்கணக்கானவர்களிடம் 24 கோடி வரை முதலீடு மோசடி செய்ததாக தெரிவித்தனர்.
தலைமறைவாக இருந்த சாமியார் – காவல்துறையின் அதிரடி வேட்டையால் கைது